திருச்சிராப்பள்ளி, ஏப்.15 - பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். பெட்ரோல், டீசல், எரிவாயு கலால் வரியைக் குறைத்து ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும். 2019 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தை திரும்ப பெற வேண்டும். சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். ஆன்லைன் அபராதம் விதிப்பதை தவிர்க்க வேண்டும். ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மாற்றிய மைக்க வேண்டும். கார்களுக்கு மீட்டர் கட்டணம் தீர்மானிக்க வேண்டும். சட்ட விரோத பைக், டாக்சியை தடை செய்ய வேண்டும். உள்ளூர் வாகனங்களின் சவாரியை தட்டிப்பறிக்கும் ட்ராப் டாக்ஸியை அனு மதிக்கக் கூடாது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு திருச்சி மோட்டார் வாகன தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் புதனன்று பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி உரிமைக் குரல் ஓட்டுனர் தொழிற்சங்க மாநில தலைவர் சுடர்வேந்தன், சிஐடியு ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் மணி கண்டன், அரசு விரைவு போக்குவரத் துக் கழக மாநிலத் துணைத் தலைவர் ஜெயராமன், லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் தேவராஜன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சீனிவாசன், உரிமை கரங்கள் மாநில துணை பொது செயலாளர் பாலச்சந்தர், சாலை போக்குவரத்து சங்க மாவட்ட செயலாளர் சந்திரன் ஆகியோர் பேசினர். முன்னதாக தலைமை தபால் நிலையம் அருகிலிருந்து, சிலிண்டரை பாடையில் வைத்து மாலை அணி வித்து மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.