districts

img

மணல் மாட்டுவண்டி கட்டணத்தை குறைக்க ஆட்சியரிடம் கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, ஜன.5- மணல் மாட்டுவண்டி கட்டணத்தை குறைத்து தொழிலாளர்களின் வாழ்வா தாரங்களை பாதுகாக்க நடவடிக்கை வேண்  டும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் சிஐடியு சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் அளித் துள்ள மனுவில், ‘‘திருச்சி மாவட்டத்தில் ஆயி ரக்கணக்கானோர், மாட்டு வண்டியில் மணல் அள்ளி பிழைத்துவருபவர்கள் கடந்த  7, 8 மாதங்களாக மணல் ரீச் திறக்காததால் பிழைப்பதற்கு வழியில்லாததால் மாடு களை பராமரிக்க முடியாமல் ஒரு பகுதி தொழி லாளர்கள் மாடுகளை விற்று விட்டார்கள்.  பல கோரிக்கைகளுக்கு பிறகு தற்போது  மணல் ரீச் சிலநாட்களாக திறக்கப்பட்டுள் ளது. வாரத்திற்கு 3 முறை மணல் அள்ள அனு மதிக்கப்படுகிறது. ஆனால், அதற்கான கட்ட ணம் ரூ.700 வசூலிக்கப்படுகிறது. ஒருமுறை மாட்டுவண்டியில் மணல் ஏற்றிவர சுமார் 12 மணிநேரம் ஆகிறது. இதனால் சாப்பாடு இதர செலவினங்கள் ரூ.300ஆக, ரூ.1000 தேவைப்படுகிறது. ரூ.1000 இல்லாத நிலை யில் மெசேஜ் வந்தாலும் மணல் அள்ள பல ரால் செல்லமுடியவில்லை.  மேலும் 12 மணிநேரம் சிரமப்பட்டு அள்ளி வரும் மணல் விற்பனை ஆவதில்லை. அப்படி விற்றால் ரூ.2000த்திற்கு தான் விற்க முடி கிறது. இந்ததொகை மாடுகளை பராம ரித்து தொழிலாளர்களும் அவர்களின் குடும்  பத்தினரும் சாப்பிடுவதற்கு போதுமானதாக இல்லை.  

எனவே கடந்த காலங்களில் இருந்தது போல் ரூ.224ஆக கட்டணத்தை குறைத்தும், மாட்டுவண்டியில் அள்ளிவரும்  மணலை விற்பனை செய்வதற்கு அரசு உரிய ஏற்  பாடு செய்ய வேண்டும். அரசு  திட்டப்பணி கள் மட்டுமாவது மணல் மாட்டுவண்டி மூலம் வரும் மணலை பயன்படுத்தினால் விற்பனை  ஆகிவிடும். மேலும் அரசு உத்தரவிற்கு புறம்  பாக லாரிகள் பல தினமும் பலமுறை மணல் அள்ள அனுமதிக்கப்படுகிறது. அதை ரத்து செய்து மெசேஜ் அனுப்பி முறைப்படுத்திட வேண்டும். ரீச் திறக்கும் நேரத்தை முன் போல் காலை 7 மணிக்கு திறந்திட வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது. நிகழ்வின்போது, மணல் மாட்டுவண்டி சங்க செயலாளர் சேகர், நிர்வாகிகள் ராஜ்மோகன், கர்ணன், கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் சந்திரசேகர், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட் டச் செயலாளர் சந்திரன் உள்ளிட்டோர் உட னிருந்தனர்.