விழுப்புரம், செப்.7 - செஞ்சி பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் மின் கோபுரம் அமைக்கப் படவுள்ளது. இந்த பணி தொடங்கும் முன் இழப்பீடு வலியுறுத்தி செவ்வா யன்று (செப்.7) மாவட்ட ஆட்சியரி டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், மேல் மலையனூர், செஞ்சி ஆகிய வட்டங்க ளில் தமிழ்நாடு மின் உற்பத்தி தொட ரமைப்பு கழகம் மற்றும் பவர் கிரிட் நிறுவனம் சார்பில் பாக்கம், புதுப் பாளையம், கருவாச்சி, தாங்கள், சத்தியமங்கலம், விநாயகபுரம், ரெட்டிபாளையம், ஆற்காம்பூண்டி, தென்பாலை, ராஜபாளையம், செவ லபுரை, தாதங்குப்பம், பொற்குணம், கலிங்கமலை உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் வழியாக மின் பாதை செல்கிறது. இந்த வழித்தடத்தில் கரும்பு, தென்னை, சவுக்கு உள்ளிட்ட பயிர்கள் நடவு செய்து உள்ள பல்வேறு பயிர் கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள் ளது. மின் பாதை கீழே உள்ள சுமார் 50 க்கும் மேற்பட்ட விவசாய கிணறு கள் பாதிக்கப்பட்டு பாசனமும் பாதிக்கப்பட்டு உள்ளது.
எனவே, விழுப்புரம் மாவட்டத் தில் பாதிக்கப்பட்டு உள்ள விவசாய கிணறுகளுக்கு இழப்பீடு வழங்க அரசு புதிய அரசாணை வெளியிட ஆட்சியர் பரிந்துரை செய்ய வேண் டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கிய பின்பே சம்மந் தப்பட்ட நிறுவனம் பணி தொடங்க உள் நுழைவு அனுமதி வழங்க வேண்டும், மின் கோபுரங்கள் விவசாய நிலங் கள் வழியே அமைவதால் நிலமதிப்பு குறைந்து, விவசாயம் பாதிக்கப்படுவ தால், இனிவரும் காலங்களில் சாலை வழியாக மின்சாரத்தை கேபில் வழி யாக எடுத்து செல்ல வேண்டும் என் பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இத னைத் தொடர்ந்து ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஏ.வி.ஸ்டாலின்மணி போராட்டத்திற்கு தலைமை தாங்கி னார். சங்கத்தின் முன்னாள் மாநிலச் செயலாளர் என்.சுப்பிரமணி யன், மாவட்ட செயலாளர் ஆர்.டி.முரு கன், தலைவர் பி.சிவராமன், மாநில குழு உறுப்பினர் ஆர்.தாண்டவ ராயன், துணைத்தலைவர் கோ.மாத வன், வட்டச் செயலாளர்கள் வி. சிவன், ஏ.நாகராஜன், வட்ட தலைவர் எஸ்.ராஜாராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.