மயிலாடுதுறை, டிச.1- மயிலாடுதுறை மாவட்டம் ஆயப்பாடியில் அகில இந்திய விவ சாய தொழிலாளர்கள் சங்கத்தின் தரங்கம்பாடி ஒன்றிய மாநாடு புத னன்று ஒன்றியத்தலைவர் எம்.கே. சாமிதுரை தலைமையில் நடை பெற்றது. மாவட்டத்தலைவர் காபிரி யேல் மாநாட்டை துவக்கி வைத்தார். ஜி.அய்யாசாமி, ஆர்.கொலுசம் மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியக்குழு உறுப்பி னர் ஏ.மகாலிங்கம் சங்க கொடியி னை ஏற்றி வைத்தார். விவசாய சங்க மாவட்ட தலைவர் டி.சிம்சன், மாதர் சங்க மூத்தத் தலைவர் ஜி. கலைச்செல்வி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்டச் செய லாளர் ஜி.ஸ்டாலின் நிறைவுரை யாற்றினார். ஒன்றியத் தலைவராக சாமி துரை, செயலாளராக தமிழ்வாசகம், பொருளாளராக எஸ்.பரமசிவம், துணைத்தலைவர்களாக வீ.குணா ளன், செல்வபாக்யவதி, துணை செயலாளர்களாக கே.பிரகாஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 15 பேர் கொண்ட புதிய ஒன்றியக் குழு தேர்வு செய்யப்பட்டது. அதீத கனமழையால் பாதிக்கப்பட்ட கூலி தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், இடிந்து விழும் நிலையிலுள்ள தொகுப்பு வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகளை கட்டித் தர வேண்டும், நூறுநாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி தினக் கூலி 600 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.