districts

img

தலைஞாயிறு என்பிகேஆர்ஆர் சர்க்கரை ஆலையில் புனரமைப்பு குழு ஆய்வு

மயிலாடுதுறை, செப்.2 - தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக் கிணங்க, வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழி காட்டுதலின்படி, மயிலாடுதுறை மாவட்டம், தலைஞாயிறில் உள்ள என்.பி.கே.ஆர்.ஆர்  சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்குவது தொடர்பாக அமைக்கப்பட்ட புனரமைப்பு குழுவினர் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற் கொண்டனர். புனரமைப்பு குழுவின் ஒருங்கிணைப்பா ளர், கூடுதல் ஆணையர் (சர்க்கரை)டி.அன்ப ழகன், சர்க்கரை ஆலை புனரமைப்பு குழு உறுப் பினர் அரசு சிறப்பு செயலாளர் (வேளா ண்மை) டி.ஆப்ரகாம், வேளாண்மை மற்றும்  உழவர் நலத்துறை இயக்குநர் ஏ.அண்ணா துரை ஆகியோர்  நேரில் ஆய்வு செய்தனர். மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர்  எஸ்.ராஜகுமார் மற்றும் குழு உறுப்பி னர்கள், என்.பி.கே.ஆர்.ஆர் சர்க்கரை ஆலை யின் கூடுதல் இயக்குநர் சதீஸ், மாவட்ட வரு வாய் அலுவலர் சோ.முருகதாஸ், மயிலாடு துறை வருவாய் கோட்டாட்சியர் வ.யுரேகா, வேளாண்மை இணை இயக்குநர் சேகர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கல்யா ணம், சத்தியசீலன் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் உடனிருந்தனர்.