கரூர், அக்.6 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் ஒன்றிய 8 ஆவது மாநாடு நடை பெற்றது. மாநாட்டிற்கு கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் அ.காதர்பாட்சா தலைமை வகித்தார். கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் சுமதி செங்கொ டியை ஏற்றி வைத்தார். கரூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கா.கந்தசாமி மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். இதில் 7 பேர் கொண்ட புதிய ஒன்றியக் குழுவும், ஒன்றியத்தின் புதிய செய லாளராக பூரணம் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட மாநாட்டு பிரதிநிதியாக 10 பேர் தேர்வு செய்யப்பட்ட னர். கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஜி.ஜீவா னந்தம் மாநாட்டை நிறைவு செய்து சிறப்புரையாற்றி னார். புகளூர் பைபாஸ் சாலை குடியிருப்பு மற்றும் புக ளூர் அரசு பெண்கள் உயர்நி லைப் பள்ளிக்கு அருகில் உள்ள மதுபான கடையை (எண்.4948) உடனடியாக இடமாற்றம் செய்ய வேண் டும் உட்பட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டன.