திருச்சிராப்பள்ளி, டிச.5- திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்களன்று மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலை மையில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். அந்த மனுவில், ‘‘ஸ்ரீரங்கம் செக்போஸ்ட் அழகிரிபுரம் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சாக்கடைநீர் கலந்து வரு கிறது. இதனால் இப்பகுதி யில் சலவைத்தொழில் செய்து வரும் 400 குடும்பங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வரு கின்றனர். அழகிரிபுரம் பகுதி யில் கழிவுநீர் குட்டை போல் தேங்கி உள்ளதால் நிலத்தடிநீர் பாதிக்கப்பட்டுள் ளது. போர் தண்ணீர் கழிவு நீர் துர்நாற்றத்துடன் வருவ தால் அதனை குடிக்கவோ, பயன்படுத்தவோ முடிய வில்லை. ஆற்றில் கழிவுநீர் கலப்ப தால் தண்ணீரில் நின்று துணி துவைக்கும் தொழிலாளி களுக்கு கை, கால்களில் தோல் வியாதிகள் ஏற்படு கிறது. எனவே கொள்ளிடம் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கூறியுள்ளார்.