மயிலாடுதுறை, பிப்.11 - மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியம், கஞ்சாநகரம் பகுதியில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, விவசாயிகளின் நெல் மூட்டைகளை சரியாக எடையிட்டு பெற வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலர்களை எச்சரித் தார். மேலும் கஞ்சாநகரம் பகுதியில் செயல்பட்டு வரும் நியாய விலைக் கடையிலும் ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து கீழையூர், நல்லுச்சேரி பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களுடன் கலந்துரையாடினார்.