districts

img

காவேரி மகளிர் கல்லூரியில் மாணவியர் பேரவை பதவியேற்பு விழா

திருச்சிராப்பள்ளி, ஜூலை 20 - திருச்சி காவேரி மகளிர் கல்லூரி மாணவி யர் பேரவை பதவியேற்பு விழா புதன்கிழமை கல்லூரி வளாகத்தில் உள்ள ராமசாமி ரெட்டி யார் கலையரங்கத்தில் நடைபெற்றது. விழா விற்கு கல்லூரி முதல்வர் முனைவர் சுஜாதா தலைமை வகித்தார். ஆங்கிலத்துறை தலை வர் முனைவர் ஜெயஸ்ரீ அகர்வால் அறிமுக உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக திருச்சி தெற்கு காவல்துறை துணை ஆணையர் ஸ்ரீதேவி பேரவை உறுப்பினர்களுக்கு பதவி பிரமா ணம் செய்து வைத்தார். மாணவியர் பேரவை  தலைவி மாணவி மோனிகா ஏற்புரையாற்றி னார். இதனைத் தொடர்ந்து கல்லூரி மலரை  ஆட்சிமன்றக்குழு தலைவர் முத்து கிருஷ்ணன் வெளியிட, அதனை ஆட்சி மன்றக் குழு செயலர் திருநீலகண்டன் பெற்றுக் கொண்டார். முன்னதாக வேதியி யல்துறை தலைவர் புங்காயி வரவேற்றார். மூன்றாம் ஆண்டு மாணவி நிவேதா நன்றி கூறி னார்.