districts

வட்டியில்லா கடன் வழங்கும் திட்டம்

மயிலாடுதுறை,  ஜூலை 26 - மயிலாடுதுறை மாவட்டம் தரங் கம்பாடியில் ஹோப் அறக்கட்டளை  மற்றும் ஒமேகா நிறுவனம் சார்பில் உடல் நலம் பேணுதல் மற்றும் கடன்  வழங்கும் நிகழ்ச்சி ஹோப் கலை யரங்கில் நடைபெற்றது. தொட்டில் முதல் தொழில் வாய்ப்பு வரை என்ற திட்டத்தின் கீழ் பெண்கள், குழந்தைகள் மற்றும்  இளைஞர்கள் நலத்தை உள்ள டக்கிய இத்திட்டத்தில் தரங்கம்பாடி பகுதிகளை சேர்ந்த கிராமப்புற ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த வர்கள் 200-க்கும் மேற்பட் டோர் இத்திட்டத்தின் கீழ் பயன டைந்துள்ளனர். இந்நிலையில், மேலும் 20-க்கும் மேற்பட்டோ ருக்கு வட்டியில்லா கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒமேகா நிறுவனம் மற்றும் ஹோப் தொண்டு நிறுவன அலுவ லர்கள் மற்றும் அதிகாரிகள் தொழில் முனைவோருக்கு கடன்க ளுக்கான காசோலைகளை வழங்கினர். கடந்த 2004-ல் ஏற்பட்ட சுனாமியின் போது வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களுக்கு எண்ணற்ற உதவிகளை செய்து  வரும் ஹோப் தொண்டு நிறுவனம் மற்றும் ஒமேகா நிறுவனத்தின் மக்கள் முன்னேற்றத்திற்கான பணிகள் தரங்கம்பாடி பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை  பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.