districts

img

டாக்டர் மாசிலாமணி காலமானார்

திருத்துறைப்பூண்டி பிப்.10-  திருத்துறைப்பூண்டி பகுதியில் 40 ஆண்டுகளுக்கு மேலாக மருத்துவ சேவை புரிந்த டாக்டர் மாசிலாமணி புதனன்று உயிரிழந்தார். அவரது இறுதி ஊர்வலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் திரளாக கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநில குழு உறுப்பினர் ஐ.வி.நாக ராஜன், மாவட்ட செயற்குழு  உறுப்பினர்கள் சி.ஜோதி பாசு, கே.ஜி.ரகுராமன், மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.சாமிநாதன், ஒன்றிய செயலாளர் டி.வி.காரல் மார்க்ஸ், ஒன்றியக் குழு  உறுப்பினர்கள் ஏ.கே.வேல வன், எஸ்.முத்துச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.