மதுரை, மார்ச் 6- தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் சாலையோரங்களில் கொடி, மரங் களை அகற்ற தனி நீதிபதி பிறப் பித்த உத்தரவை உறுதி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்த ரவு பிறப்பித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த அமா வாசை உயர்நீதிமன்ற மதுரை அமர் வில் மேல்முறையீட்டு வழக்கினை தாக்கல் செய்திருந்தார். அதில் விளாங்குடி பகுதியில் அதிமுக கொடிக்கம்பம் வைக்க அனுமதி கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, “தமிழகத்தில் பொது இடங்கள், மாநில, தேசிய நெடுஞ் சாலைகள், உள்ளாட்சி அமைப்பு களில் அமைக்கப்பட்டுள்ள அனை த்து கட்சி, சாதி, மத மற்றும் பிற அமைப்புகளின் நிரந்தர கட்சி கொடிக் கம்பங்களை அகற்றவும், அரசியல் கட்சியை சேர்ந்தவர் களோ, சாதி, மத அமைப்பினரோ அவர்களுக்கு சொந்தமான இடங்க ளில் முறையாக அனுமதி பெற்று நிரந்தரமாக கொடி கம்பங்களை வைத்துக் கொள்ளலாம். தமிழக அரசு தனியார் நிலங்களில் கொடிக் கம்பங்களை வைப்பது தொடர் பான வழிகாட்டுதல்களை உரு வாக்க வேண்டும்” என பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவு சட்டவிரோதமா னது இதனால் மிகுந்த இழப்பிற்கு ஆளாகியுள்ளோம். ஆகவே தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்து சாலைகளில் கொடி மரங் கள் வைக்க கட்சிக் கொடி ஏற்ற அனுமதித்து உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி அமர்வு முன்பு வியாழ னன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், கட்சி கொடி களை சாலைகளில் வைப்பது பல ஆண்டுகளாக நடைமுறையில் உள் ளது. இதற்கு தடை விதித்தது ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டது. அப்பொழுது நீதிபதிகள், “தனி நீதிபதியின் உத்தரவில் என்ன தவறு உள்ளது? சம்பந்தப்பட்டவர்கள் அவர்களுக்குச் சொந்தமான இடங்களில் வைத்துக் கொள்ளட் டும்” என தெரிவித்தனர். அப்போது, தமிழக அரசின் சார்பில் கூடுதல் தலைமை வழக்கறி ஞர் பாஸ்கரன் ஆஜராகி, இது அர சியல் கட்சிகளின் அடிப்படை உரிமை, பொது இடங்களில் கொடி வைக் கக் கூடாது என தனி நீதிபதி உத்தர விட்டது தவறு என வாதிட்டார்.
காவல்துறையின் தரப்பில் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்க றிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜ ராகி, தமிழகத்தில் பல்வேறு கட்சி கள் உள்ளன. சாலையோரங்களில் கொடிகள் வைப்பது, கொடி மரங்கள் அமைப்பது கட்சிகளின் ஜனநாயக உரிமையாக பார்க்கப் படுகிறது. இதையெல்லாம் கருத் தில் கொள்ளாமல் கட்சி கொடி மரங் கள் வைக்கக்கூடாது என உத்தரவு பிறப்பிக்க கூடாது. மேலும் வர லாற்றில் நாடு சுதந்திரம் அடைவ தற்கு முன்பிருந்தே சாலைகளில் கொடி மரங்கள் நடுவது வழக்கத் தில் உள்ளது. சேர,சோழ, பாண்டி யர்கள் இமயத்திலும் கொடி நட்டார் கள் என்கிற பெருமை தமிழர் களுக்கு உண்டு. அதேபோல் சுதந்தி ரப் போராட்ட வீரர் கொடிகாத்த கும ரன் வரலாறு நமக்கு தேசப்பற்றை ஊட்டுகிறது. எனவே சாலை ஓரங் களில் கட்சி கொடிகள் வைக்க அனு மதிக்க வேண்டும். ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடைபெற்று இருக்க லாம். அதற்காக முற்றிலும் தடை விதிக்கக் கூடாது. இது அரசியல் கட்சிகளுடைய ஜனநாயக உரிமை என வாதிட்டார். அப்பொழுது நீதிபதிகள், “தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகளில் கட்சி கொடி கள், பிளக்ஸ் பேனர்கள் வைப்ப தால் அவ்வப்போது உயிரிழப்பு கள் ஏற்படுவதை நாங்கள் உணர்ந்து உள்ளோம். இது போன்ற உயிரிழப்புகள் ஒரு குடும்பத்திற்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தும் என்பதும் எங்களுக்கு தெரியும். சாலைகள் என்பது தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் இருக்க வேண்டும். ஆனால் இதுபோன்று கட்சி கொடி மரங்கள், கட்சி கொடிகள் ஊன்றப் படுவதால் போக்குவரத்துக்கு தடை ஏற்படுகிறது. எனவே ஒரு போதும் இதை அனுமதிக்க மாட்டோம். மேலும் சட்ட விதிகளின் படி பொது இடங்களில் அரசியல் கட்சிகளுக்கோ அல்லது அமைப்பு களுக்கோ அனுமதி வழங்க அர சுக்கு அதிகாரமில்லை. தனி நீதிபதி இளந்திரையன் பிறப்பித்த உத்தரவு சரிதான். அர சியல் கட்சிகள் கொடி மரங்களை தங்கள் கட்சி அலுவலகங்களில் வேண்டுமானால் வைத்துக் கொள் ளுங்கள். வீதிகளில் வைக்க வேண் டாம். திருப்பூர் கொடிகாத்த குமரன் சுதந்திரப் போராட்டத்தை வலி யுறுத்தி கையில் தான் கொடிகளை ஏந்தி சென்றார். எந்த தெருவிலும், சாலையிலும் ஊன்றவில்லை. சாலைகளில் தான் கட்சிக் கொடி களை ஊன்ற வேண்டும் என்பது ஜனநாயக உரிமையாக பார்க்க முடியாது என்று தெரிவித்த நீதி பதிகள், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. இந்த மனு தள்ளுபடி செய்யப்படு கிறது என உத்தரவிட்டனர்.