மன்னார்குடி, ஏப்.19- பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும், வேளாண் விரோத சட்டங்க ளுக்கு ஆதரவாக செயல்படும் ஒன்றிய அரசு, மேகதாதுவில் அணை கட்ட தீர்மானித்திருக்கும் கர்நாடக பாஜக அரசை கண்டித்தும் அனைத்து கட்சிக ளையும் சார்ந்த விவசாய சங்கங்க ளின் சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் மன்னார் குடியில் நடைபெற்றது. மன்னார்குடி கீழப்பாலம் நகராட்சி அலுவலகம், மன்னை நாராயணசுவாமி சிலை, தேரடி, பந்தலடி ஆகிய 5 ஐந்து மையங்களில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்திற்கு விவசா யிகள் சங்கங்களின் தலைவர் கள் ஏ.ராஜேந்திரன், ஆர்.சதா சிவம், ஜி.மாரிமுத்து, வி.எம்.கலியபெருமாள், எம்.பி.ராஜ்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். சிபிஎம் நகரச் செயலாளர் ஜி.தாயு மானவன், சிஐடியு தலைவர்கள் ஜி.ரகுபதி, டி.ஜெகதீசன், தி.க நகரச் செயலாளர் ராமதாஸ், காங்கிரஸ் நகர தலைவர் கனக வேல், பறவை எம்.கலியபெரு மாள், மதிமுக சன் சரவணன், கோவி மீனாட்சிசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.