திருச்சிராப்பள்ளி, மார்ச் 12 - தோழர் மணிவண்ணன் 16 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி ஸ்ரீரங்கம் பகுதிக்குழு சார்பில் வெள்ளிக்கிழமை கிழக்கு வாசல் பகுதியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு நந்தகுமார் தலைமை வகித்தார். தோழர் மணிவண்ணன் உருவப்படத்தை மாநகர் மாவட்ட செயலா ளர் ராஜா திறந்து வைத்தார். மணிவண்ணன் நினைவு கொடியை மாநிலக் குழு உறுப்பினர் ஸ்ரீதர் ஏற்றி வைத்து பேசினார். மாவட்ட குழு உறுப்பினர் சந்தானம், முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் வீரமுத்து, ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் தர்மா ஆகியோர் பேசினர். பகுதிக்குழு உறுப்பினர்கள் உள்பட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.