districts

அடிப்படை ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும் அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தல்

திருச்சிராப்பள்ளி, ஆக.23 - தமிழ்நாடு அரசு அனைத் துத்துறை ஓய்வூதியர் சங்க திருச்சி மாவட்ட 4-வது  மாநாடு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில்  உள்ள சீனிவாசா ஹாலில்  செவ்வாயன்று நடைபெற்றது. மாநாட்டிற்கு தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய் வூதியர் சங்க மாவட்ட  தலைவர் செந்தமிழ்செல் வன் தலைமை வகித்தார்.  தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர் சுடலை யாண்டி துவக்க உரையாற் றினார். வேலை அறிக் கையை மாவட்ட செயலாளர் மதிவாணன் வாசித்தார். நிதி அறிக்கையை மாவட்ட பொருளாளர் துளசிராமன் சமர்ப்பித்தார். ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் சிராஜூதீன் கருத்துரையாற்றினார்.  மாநாட்டில், தமிழக  முதல்வர் தேர்தல் அறிக் கையில் அறிவித்தவாறு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூ திய திட்டத்தை அமல்படுத்த  வேண்டும். 70 வயது நிறைவு பெற்ற ஓய்வூதியர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க  வேண்டும்.  21 மாத ஊதியக் குழு நிலுவை மற்றும் அக விலைப்படி நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும். கம்யூடேசன் பிடித்த காலத்தை 15 ஆண்டுகளிலிருந்து 12 ஆண்டுகளாக குறைக்க வேண்டும். ஓய்வூதியர் மருத்துவ காப்பீட்டு திட்ட குறைபாடுகளை சரிசெய்ய வேண்டும். குறைந்தபட்ச அடிப்படை ஓய்வூதியம் ரூ.  9000 நிர்ணயம் செய்ய வேண்டும். ஏ மற்றும் பி பிரிவு என ஓய்வூதியர்களை வகைப்படுத்தாமல் அனை வருக்கும் ஒருமாத ஓய்வூதி யத்தை பொங்கல் போனசாக வழங்க வேண்டும்  என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.  மாவட்டத் தலைவராக எம்.வி.செந்தமிழ்செல்வன், செயலாளராக எஸ்.மதிவா ணன், பொருளாளராக எல்.துளசிராமன் உள்பட 11 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாநில பொருளாளர் ஜெயச் சந்திரன் நிறைவுரையாற்றி னார்.  மாவட்ட துணைத்தலை வர் புருஷோத்தமன் வர வேற்றார். மாவட்ட இணைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.