மயிலாடுதுறை, ஏப்.29 - மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம் பாடியில் “ரேகை” என்ற தலைப்பில் ஓவியக் கல்லூரி மாணவர்களின் ஓவியம் மற்றும் சிற்ப கண்காட்சி வெள்ளிக் கிழமை துவங்கியது. தரங்கம்பாடி யில் உள்ள தமிழறிஞர் சீகன்பால்கு அருங்காட்சியகத்தின் மேல்தளத்தில் அமைக்கப்பட்டுள்ள இக்கண் காட்சியை திருச்சி கலை காவேரி நுண் கலை கல்லூரி பேராசிரியர் சதீஷ் குமார் திறந்து வைத்தார். தரங்கம்பாடி புதிய எருசலேம் ஆலய ஆயர் சாம்சன் மோசஸ் கண்காட்சியை துவக்கி வைத்து உரையாற்றினார். சீகன் பால்கு அருங்காட்சியகத்தின் இயக்கு நர் டாக்டர் சாமுவேல் மனுவேல், டேனிஷ் அருங்காட்சியக இயக்குநர் சங்கர் மற்றும் அலுவலர்கள், ஓவியக்கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். கும்பகோணம் மற்றும் சென்னை யில் உள்ள அரசு கவின் கல்லூரியில் பயின்று வரும் ஓவியர்கள் மாலினி, தேவி ப்ரியா, நிரஞ்சனா, மகேஷ், சுபாஷ், சத்தியராஜ், ராதாகிருஷ்ணன் ஆகி யோர் வரைந்த ஓவியங்கள், ஆயில் கலர் ஓவியங்கள் மற்றும் உலோகம், பைபர் சிலைகள், தகட்டு சிற்பம், சுடு மண் சிலைகள் போன்ற பல வகை யான படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. குறிப்பாக தலைவனின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் தலைவி, நவீன காலத்தில் ஃபேஸ்புக், டுவிட்டர், டிக்டாக் உள்ளிட்ட வலைதளங்களில் மூழ்கிக்கிடப்பவர்கள், மூங்கில் ஓவியம், அதிகாலையை குறிக்கும் சிற்பம், பதவி ஆசை ஓவியம், ஆணாதிக்கம், வீடற்றவர்களைக் குறிக்கும் சிற்பம் ஆகிய படைப்புகள் பார்வையாளர் களை வெகுவாய் கவர்ந்து வருகின்றன. 15 நாட்கள் தொடர்ந்து நடைபெற வுள்ள இக்கண்காட்சியை கட்டணமின்றி பொதுமக்கள் பார்வையிடுவதோடு, படைப்புகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையை கொடுத்து வாங்கிச் செல்ல லாம் என கண்காட்சியை ஒருங்கி ணைத்த ஓவியர்கள் இராதாகிருஷ் ணன், சத்தியராஜ் ஆகியோர் தெரிவித் துள்ளார்.