districts

img

ஏப்.5 தில்லி பேரணி விளக்க கருத்தரங்கம்

திருச்சிராப்பள்ளி, மார்ச் 11- பிஎஸ்என்எல் இயூ, ஏஐபிடிபிஏ மற்றும் டிஎன்டிசி டபுள்யூயூ திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் தில்லி பேரணி கோரிக்கை விளக்க கருத்தரங்கம் தொலை தொடர்புத்துறை திருச்சி மண்டல பொதுமேலாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு ஏஐபிடிபிஏ மாவட்டச் செயலாளர் சின்னையன் தலைமை வகித்தார்.  டிஎன்டிசிடபுள்யூயூ மாவட்டச் செயலாளர் முபாரக்அலி, பிஎஸ்என் எல்இயூ மாவட்டச் செயலாளர் சுந்தரராஜு, பிஎஸ்என்எல்இயூ மாநில அமைப்புச் செயலாளர் அண்ணாதுரை, ஏஐபிடிபிஏ மாநில அமைப்புச் செயலாளர் முகமது ஜாஃபர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்