districts

பேச்சுவார்த்தையில் உடன்பாடு சிபிஎம் போராட்டம் ஒத்திவைப்பு

மன்னார்குடி, ஜூன் 15 - நூறு ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வந்த மன்னார்குடி அம்பலக்காரத் தெரு மக்களுக்கு பட்டா வழங்கும் வரை 15.6.2022 அன்று மன்னார்குடி வருவாய் கோட் டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்து வதென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரக்குழு முடி வெடுத்திருந்தது. இந்நிலையில் ஜூன் 14 அன்று வருவாய்த்துறை அழைப் பின்பேரில் மன்னார்குடி வருவாய் கோட்ட அலுவலர் தலை மையில், அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. மன்னார்குடி  வருவாய் வட்டாட்சியர், மன்னார்குடி காவல் ஆய்வாளர், சார்  ஆய்வாளர், கட்சியின் சார்பில் மாவட்டக்குழு உறுப்பினர் எஸ். தம்புசாமி, நகர செயலாளர் ஜி.தாயுமானவன், ஒன்றிய செய லாளர் கே.ஜெயபால், நகர 12-வது தெரு கிளை உறுப்பினர் டி. ஜெகதீசன், பி.செந்தில்குமார், ஜி.முத்துக்கிருஷ்ணன், வழக்கு ரைஞர் ஏ.மார்க்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில், போராட்டத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க மன்னார்குடி வருவாய்த்துறையினரால் 13.8.2022 வரை  அவகாசம் கோரப்பட்டுள்ளது. இதனால் போராட்டம் தற்காலி கமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.