திருவாரூர், ஜூன் 21 - கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வேண்டும். அங்கன் வாடி ஊழியர்களுக்கென தனியாக கூட்டுறவு கடன் சங்கம் தொடங்கப்பட்ட பின்னரும் சத்து ணவு ஊழியர்கள் கூட்டுறவு கடன் சங்கத்தில், அங்கன்வாடி ஊழியர்களையும் சேர்ப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திரு வாரூர் மாவட்டம் விளமலில் செயல்பட்டு வரும் கூட்டுறவு இணை பதிவாளர் அலுவ லகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் செவ்வாய்க் கிழமையன்று ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பிரேமா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முருகையன், மாவட்ட தலைவர் மாலதி, அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் தவமணி மற்றும் நிர்வாகி கள் திரிபுரசுந்தரி, ராஜலெட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர்.