திருவாரூர், ஜன.1 - தஞ்சையிலிருந்து வேளாங்கண்ணி வரை நடை பெறும் தேசிய நெடுஞ்சா லைப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக் கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரு வாரூர் மாவட்டச் செயலா ளர் ஜி.சுந்தரமூர்த்தி விடுத் துள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி சிபிஎம் அரசியல் பேரவை நடைபெற் றது. இதில் பங்கேற்ற கட்சி யின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் செய்தியாளர் களுக்கு பேட்டியளித்தார். அப்போது, தஞ்சையில் இருந்து வேளாங்கண்ணி வரை நடைபெறும் தேசிய நெடுஞ்சாலைப் பணி தாமத மாக நடைபெறுகிறது. இத னால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். சாலை மிகவும் மோசம டைந்து சாலை முழுவதும் பள்ளங்கள் இருப்பதால், அடிக்கடி விபத்து நிகழ்கிறது. இந்த தேசிய நெடுஞ் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் எனக் கோரி திருவாரூர், நீடாமங்க லம் மற்றும் கொரடாச்சேரி - கிளரியம் உள்ளிட்ட பகுதி களில் கட்சியின் சார்பாக கடந்த மாதங்களில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட் டத்தின் போது, பேச்சு வார்த்தையில் அதிகாரிகள் உறுதியளித்தபடி தற் போது வரை சாலைப் பணி விரைந்து நடைபெறவில்லை. எனவே தமிழக முதல மைச்சர் இதில் தனி கவ னம் செலுத்தி, சம்பந்தப் பட்ட துறை சார்ந்த அதிகாரி களை தொடர்பு கொண்டு, விரைந்து பணியை மேற் கொள்ள அறிவுறுத்த வேண் டும்” என தெரிவித்தார். இதனையடுத்து, தற் போது நீடாமங்கலம்-வயகளத் தூர் பாலம் அருகிலிருந்து சாலை பணி துவங்கி நடை பெற்று வருகிறது. சிபிஎம் கோரிக்கையை ஏற்று சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இருந்தாலும், பணியின் போது இருபுறமும் பள்ளமும் மேடுமாக உள் ளது. பள்ளமாக உள்ள பகுதி யையும் சீர்படுத்தி சாலை பணியை தரமாக மேற் கொள்ள வேண்டும். இப் பணியை விரைந்து மேற் கொள்ள நடவடிக்கை எடுத்த அனைவருக்கும் சிபிஎம் திரு வாரூர் மாவட்ட குழு சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.