குடவாசல், ஜூன் 12 - திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் நடுவஞ் சேரியில் கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சிக்கு சிபிஎம் கிளை செயலாளர் சின்னராஜ் தலைமை வகித்தார். இதில் பல்வேறு கட்சியில் இருந்து விலகி 4 குடும்பத்தைச் சார்ந்த 20 பேர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர். கட்சியில் புதி தாக இணைந்தவர்களை மாவட்டச் செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி வரவேற்று, செங் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். நன்னிலம் ஒன்றியச் செய லாளர் கே.எம்.லிங்கம், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எம்.சேகர், மாவட்ட கவுன் சிலர் ஜெ.முகமது உது மான், நகர செயலாளர் சீனி. ராஜேந்திரன், பண்டார வாடை ஊராட்சி மன்றத் தலைவர் பி.ஜெயசீலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.