திருவண்ணாமலை, அக். 22- திருவண்ணாமலை மாவட்டம் மேற்கு ஆரணி ஊராட்சிக்குட்பட்ட ராமசாணி குப்பம் கிராமத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணி வழங்கப்பட்டு வருகிறது. இதில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு, கூலியை குறைத்து வழங்குவது, ஏற்றத் தாழ்வான கூலி வழங்குவது ஆகியவற்றைக் கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு எஸ்.பாலசுந்தரம் தலைமை தாங்கி னார், மாவட்டக் குழு உறுப்பினர் சி.அப்பாசாமி, கிளைச் செய லாளர் ஆதிகேசவன், ராம லிங்கம், தனபால் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசி னர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கண்ணமங்கலம் காவல் ஆய்வாளர் மகாலட்சுமி, ஊராட்சி மன்றத் தலைவர் மகேஸ்வரி பார்த்திபன் ஆகியோர் மறி யலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது வட்டார வளர்ச்சி அதிகாரி களிடம் கலந்து பேசி முறை யான கூலி வழங்க நட வடிக்கை எடுக்கப்படும் என உறுதி யளித்தனர். இதையடுத்து அனை வரும் கலைந்து சென்றனர்.