districts

கோழிக்கழிச்சலுக்கு திருவள்ளூரில் தடுப்பூசி முகாம்

திருவள்ளூர், பிப்.2- திருவள்ளூர் மாவட்டத் தில் கோழிகளை தாக்கும் ஒருவகை கோழிக்கழிச்சல் நோயை தடுக்க தடுப்பூசி முகாம் பிப்1 முதல் 14 நடத்தப்படஉள்ளது. கோழிக் கழிச்சல் நோயின் அறிகுறிகளான கோழிகள் உடல் நலம்  குன்றியும் சுறுசுறுப்பின்றி யும் உறங்கியபடி இருக்கும். தீவனம்,தண்ணீர் எடுக்காமலும் இருக்கும். எச்சம் வெள்ளைநிறத்தில் அதிக துர்நாற்றத்துடன் இருக்கும். கோழிகளின் இறகுகள் சிலிர்த்து தலைப் பகுதி உடலுடன் சேர்ந்து இருக்கும். கோழிக் கழிச்சல் நோய்  கோழிகளைத் தாக்கும் நோய்களிலேயே மிகவும்  மோசமானது. இந்நோய் ஏற்படுவதை முன்கூட்டியே தவிர்க்கும் பொருட்டு ஆண்டுதோறும் இரு வார கோழிக் கழிச்சல் தடுப்பூசிமுகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. திருவள்ளூர் மாவட்டத் தில் ஆண்டுதோறும் கால்நடை பராமரிப்புத் துறை மூலமாக பிப்ரவரி மாதத்தில் இருவார கோழிக்  கழிச்சல் தடுப்பூசி முகாம்  நகர, கிராம மற்றும் குக் கிராமங்களில் நடத்தப்பெற  உள்ளது. அவ்விடங்களி லுள்ள கோழிகளுக்கு தடுப் பூசிப்பணி மேற்கொள்ளப் பட்டு வருகிறது. அதேபோல இவ்வாண் டும் 2.78 லட்சம் கோழிகளுக் குத் தடுப்பூசிப் பணி மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிப்ரவரி 1முதல் 14  வரை தடுப்பூசிப் பணி  மேற்கொள்ளப்பட விருக்கி றது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள கால்நடை மருந்தகங்களை அணுகி முகாம் நடைபெறும் இடங்களுக்கு 8 வாரம் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய கோழிகளை கொண்டு சென்று கோழிக் கழிச்சல் தடுப்பூசி போட்டு பயனடையுமாறு திருவள் ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கேட்டு கொண்டுள்ளார்.