திருவள்ளூர், பிப்.20- “அறிஞர் பார்வையில் சிங்காரவேலர்” என்ற புத்த கத்தை எழுத்தாளர் வீ.கலிய பெருமாள் தொகுத் துள்ளார். இந்த புத்தக வெளியீட்டு விழா ஞாயிறன்று (பிப் 19) பழவேற்காடு அருகில் உள்ள திருமலை நகர் கிராமத்தில் நடைபெற்றது. இதனை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.கலையரசன் வெளியிட , திருமலை நகர் கிராம நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர். வாலிபர் சங்கத் தின் மீஞ்சூர் பகுதி தலைவர் வே.விநாயகமூர்த்தி தலை மையில் நடந்த நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் சிவா வரவேற்றார். புலவர்.பா வீர மணி கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு பதிப்பாசி ரியர் அ.பகத்சிங் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மீன்பிடி சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜி.விநா யகமூர்த்தி, மாவட்ட செயலா ளர் டி.நித்யானந்தம், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் மோசஸ் பிரபு வாலிபர் சங்கத்தின் நிர்வா கிகள் மோகன், ஜெய்க ணேஷ், தேவேந்திரன் ஆகி யோர் வாழ்த்தி பேசினர். அகிலன் நன்றிகூறினார்.