districts

img

பேராசிரியர் பாலியல் தொல்லை: மாணவர்கள் சாலை மறியல்

திருவள்ளூர், ஏப்.8- பொன்னேரி எல்என்ஜி கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உதவி பேராசிரியரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி வகுப்பு களை புறக்கணித்த மாணவர்கள் வெள்ளியன்று (ஏப்.8) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி யிலுள்ள உலகநாத நாராயணசாமி அரசினர் கலைக்கல்லூரியின் ஆங்கில  துறை உதவி பேராசிரியர் மகேந்திரன். இவர், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் செய்யப் பட்டது. இதையடுத்து  பெண் வன்கொடுமை, மானபங்கம் படுத்து வது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ்வழக் குப் பதிவு செய்த அனைத்து மகளிர் காவல்துறையினர் மகேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், உதவி பேராசிரி யர் மகேந்திரனை பணிநீக்கம் செய்ய  வேண்டும், கல்வி நிலையங்களில் நடை பெறும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க அனைத்து பள்ளி கல்லூரி களிலும் பல்வேறு துறை சார்ந்த உறுப்பினர்கள் அடங்கிய பெண்கள் குறைதீர்ப்பு குழு அமைக்க வேண்டும். பாலியல் தொல்லை தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத  கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி கல்லூரி வகுப்பு களை புறக்கணித்த மாணவர்கள், இந்திய மாணவர் சங்கத்தின் தலைமை யில் எல்என்ஜி கல்லூரி நுழைவு வாயில்  முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். மாணவர் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் அரவிந்த்சாமி, மாவட்டத் தலைவர் மதன், மாவட்டச் செயலாளர் வசந்த், மாவட்ட துணை நிர்வாகிகள் டிக்சன், ஸ்வேதா, கதிர், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் டி.மதன், சிபிஎம் பொன்னேரி பகுதி செயலாளர் எஸ்.இ.சேகர், மாவட்டக் குழு உறுப்பினர் இ.தவமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.