districts

ரயில்வே நிலத்தில் குடியிருப்போருக்கு நோட்டீஸ்

திருவள்ளுர், மார்ச் 28- கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் நகர், வள்ளியம்மன் நகர், கரிமேடு உள்ளிட்ட பகுதி களில்  ரயில்வேக்கு சொந்த மான நிலத்தில் 120 குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந்தநிலையில் அவர்கள் 15 நாட்களில் வீடு களை காலி செய்ய வேண்டும் என்று ரயில்வே சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. இதனால் 120 குடும்பங்களை சேர்ந்த 609 பேர் பாதிக்கப்படும் நிலை உள்ளது. அவர்கள் தங்க ளுக்கு மாற்று இடம் வழங்க கோரியும் வீடு களை காலி செய்ய கால அவகாசம் வழங்க கோரி யும்  அப்பகுதி மக்கள் சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராம நாதனிடம் மனு அளித்தனர்.