திருவள்ளூர், மே 15- புதுப்பேட்டையில் வசிக்கும் பழங்குடியின மக்களின் பலவீனமான தொகுப்பு வீடுகளை இடித்துவிட்டு புதியவீடுகளை கட்டித்தரவேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள் ளது. புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட புதுப்பேட்டையில் பழங்குடியி னர் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். கும்மிடிப்பூண்டியை அடுத்த புதுப் பேட்டை ஏரிக்கரை ஓரம், பனை ஓலை, சாக்கு பைகளை கொண்டு குடிசை அமைத்து பல ஆண்டுகளாக வாழ்ந்து வந்தனர். குடிக்க தண்ணீர் இல்லாத தால், குட்டை நீரை பருகி வந்தனர். அடிப்படை சுகாதார வசதிகளின்றி வாழ்ந்து வந்தனர். இந்த நிலை யில் சுகாதாரமற்ற தண்ணீரை பருகிய தால் 2017 ல் மர்ம காய்ச்சலால் பாதிக்கப் பட்டு சிகிச்சை பலனின்றி நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து சுகாதார துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.பழங்குடி மக்களின் பரிதாப நிலையில் இருப்பதை அதிகாரி கள் உணர்ந்தனர். அப்போது பழங்குடி இன மக்களுக்கு குடிமனை பட்டா, தொகுப்பு வீடுகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர் போன்ற அடிப்படை தேவை களை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அதன் பிறகு புதுகும்மிடிப்பூண்டி கிராம ஊராட்சி சேவை மையத்தில் தங்கவைக் கப்பட்டனர். இந்த சூழலில் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் ரூ.1.70 லட்சம் மதிப்பீட்டில் 13 குடும்பங்க ளுக்கு தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக் கப்பட்டுள்ளது. கட்டி கொடுக்கப் பட்டுள்ள தொகுப்பு வீடுகளின் மேல் தளத்தில் தரமான ஓடுகள் பதிக்காத தால், தற்போது பெய்த மழையில், மேல் தளத்தில் மழைநீர் தேங்கி பொத்தல் அடைந்த குடிசைவீடுகளை போல் ஆங்காங்கே ஒழுகி வீடுகள் சேதம் அடைந்துவருகிறது. இதுநாள் வரை எந்த வீட்டிற்கும் கழிவறை கட்டி கொடுக்கவில்லை. இப்படி பல்வேறு இன்னல்களுடன் மத்தியில் இம்மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த மக்களை தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழ்அரசு, பழங்குடி மக்கள் இயக்கத்தின் நிர்வாகி தங்கவேல் ஆகியோர் சனிக்கிழமை யன்று (மே 14) அன்று சந்தித்து பிரச்சனை கள் குறித்து பேசினர். தொகுப்பு வீடுகள் அனைத்தும் சவுடு மண் கொண்டு கட்டப்பட்டுள்ள தால் குறுகிய காலத்திலேயே இடிந்து விழும் நிலையில் உள்ளது. ஏற்கனவே உயிர் சேதங்கள் ஏற்பட்ட சோகத்தில் உள்ள குடியிருப்புவாசிகள் மீண்டும் வீடுகள் இடிந்து விடுமோ என்ற அச்சத்தின் பிடியில் உள்ளனர். மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் அதிகாரிகள் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். வீடுகளின் உறுதி தன்மையை அறிந்து மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என பொது மக்கள் அரசிடம் கோரிக்கை விடுத் துள்ளனர். - பெ.ரூபன்