districts

img

உலக புத்தக தினம்: கோவில்பட்டியில் புத்தகக் கண்காட்சி

தூத்துக்குடி, ஏப்.23- கோவில்பட்டி வட்டார நூலகத் தில் சனிக்கிழமையன்று உலக புத்தகத் தினத்தை முன்னிட்டு புத்தகக்  கண்காட்சி, நூல் வெளியீட்டுவிழா மற்றும் மாணவ, மாணவியருக்கு வினாடி வினா, போட்டி நடை பெற்றது.  விழாவிற்கு வாசகர் வட்டத்  தலைவர் இரவீந்தர் தலைமை தாங்கி னார். வாசகர் வட்டத்துணைத் தலை வர் நடராஜன் முன்னிலை வகித்தார். புத்தக கண்காட்சியை தொழிலதி பர் ரவி மாணிக்கம் திறந்து வைத்தார். வட்டார நூலகர் அழகர் சாமி வரவேற்றார். ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் உலகநாதன், சுகாதாரத்துரை அரிமா வெங்கடா சலம் ஆகியோர் மாணவ, மாணவி யருக்கு வினாடி வினா நிகழ்வை நடத்தினர். நூலகர் கலைச்செல்வி நன்றி கூறினார். விழாவில் மறைந்த வாசகர் வட்டத் தலைவர் பேராசிரி யர்.இராசமாணிக்கத்திற்கு அஞ்சலி  செலுத்தப்பட்டது. ‘‘மாணவர் உலா’’ என்ற  நூலினை கலை இலக்கிய காவலர்  அபிராமி முருகன் வெளியிட, ரோட்டரி சங்கம் ரவிமாணிக்கம் பெற்றுக் கொண்டார். வினாடி வினா போட்டி யில் கலந்துகொண்டு அதிக மதிப் பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு புத்தகங்கள் இலக்கிய உலா சார்பில்  பரிசாக வழங்கப்பட்டது.