தூத்துக்குடி , ஜன. 12 குமரி மாவட்ட சங்குகுளி தொழிலா ளர்களை தூத்துக்குடியில் தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட சங்கு குளிப்போர் நலச்சங்கம் சார்பில் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனு: நாங்கள் எங்கள் முன்னோர்கள் காலத்தில் இருந்து பாரம்பரியமாக சங்குகுளி தொழில் செய்து வருகி றோம். தூத்துக்குடி மாவட்டத்திற்கு கன்னியாகுமரி, திருநெல்வேலி, மற்றும் இராமநாதபுரம் பகுதியில் இருந்து சங்குளி தொழிலாளர்கள் வந்து சங்குளி தொழில் செய்வது வழக்கம். இந்நிலையில் தொழில் போட்டியின் பொறாமையின் காரணமாக கன்னியா குமரி மாவட்ட சங்குளி தொழிலாளர்க ளை இங்கே வந்து தொழில் செய்யக் கூடாது என்று ஒரு சில நபர்கள் தடுத்து வன்முறையில் ஈடுபட்டனர். இது சம்பந்தமாக சமாதான பேச்சுவார்த்தை கடந்த 08.12.2022 அன்று சார் ஆட்சி யர் அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் கன்னியாகுமரி மாவட்ட சங்குளி தொழிலாளர்கள் யாரும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரக் கூடாது என்று சார் ஆட்சியர் தற்காலி கமாக தடை விதித்தார். இது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று நாங்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தோம். மேலும் சார்பு ஆட்சியரின் உத்தரவு செல்லாது மற்றும் ரத்து செய்யப்படுகிறது என்று உயர்நீதிமன்றம் உத்தரவு வழங்கி யுள்ளது. எனவே எங்கள் வாழ்வாதா ரத்தினை கருத்தில் கொண்டு உயர் நீதிமன்ற கிளை உத்தரவை மாவட்ட ஆட்சியர் அமல்படுத்திட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.