நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
தேனி மாவட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ள நியூட்ரினோ திட்டம் தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி, தமிழகத்தைச் சேர்ந்த பூவுலகின் நண்பர்கள் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்திருந்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்துக்கு வந்தது.
இதில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்திருந்தது. அதில், “நியூட்ரினோ திட்டம் அமைவிடம், மதிகெட்டான் – பெரியார் புலிகள் இடம்பெயர்வு பாதையில் அமைந்துள்ளதால் காட்டுயிர் வாரிய அனுமதி வழங்க முடியாது என தேனி மாவட்ட வனத்துறை பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலிகள் சரணாலயத்தை கம்பம் பள்ளத்தாக்குடன் இணைக்கும் முக்கிய இணைப்பாக போடி மலை விளங்குகிறது. நியூட்ரினோ திட்ட அமைவிடம் புலிகளின் இடம்பெயர்வு, இனப்பெருக்கத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் மனித செயல்பாடுகளால் அதிர்வுகள் ஏற்பட்டால், புலிகளின் நடமாட்டத்தில் மிகப்பெரிய அளவில் மாற்றம் ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த மலை பகுதியானது வைகை அணைக்கு நீர் தருகின்ற பெரியாறு நதியின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக விளங்குகிறது. எனவே, நியூட்ரினோ திட்டத்தை விட மேற்கு தொடர்ச்சி மலையின் பாதுகாப்பே மிகவும் முக்கியம். தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்தை அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதிலளித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து இவ்வழக்கின் விசாரணையை வரும் 22 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இதுகுறித்து தமிழக அரசின் வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் கூறியதாவது,