districts

img

மண் தர மறுத்த குவாரி உரிமையாளர் ஆண்டிபட்டியில் காத்திருப்பு போராட்டம்

தேனி, ஜூன் 6- ஆண்டிபட்டி அருகே மண் குவாரி யில் இருந்து செங்கல் காளவாசல் களுக்கு சொந்த வாகனத்தில் மண்  தரமறுத்து வரும் குவாரி உரிமையா ளர்களை கண்டித்து ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் தலைமையில் காள வாசல் தொழிலாளர்கள் காத்தி ருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆண்டிபட்டி ஒன்றியம், கன்னி யப்பபிள்ளைபட்டி சுற்றுவட்டார பகு திகளில் 50 க்கும் மேற்பட்ட செங்கல் காளவாசல்கள் செயல்பட்டு வரு கிறது. இந்த செங்கல் காளவாசல் களுக்கு தேவையான மண் அதே பகு தியில் அரசு அனுமதியுடன் செயல் படும் குவாரியில் விற்பனை செய்யப்  பட்டு வந்தது.  இந்நிலையில் கடந்த சில வாரங்க ளாக குவாரி நடத்துபவர்கள் தங்கள்  வாகனத்திலேயே மண் காளவாசல் களுக்கு வழங்குவதாகவும், அதற்  கான வாடகையும் சேர்த்து கொடுத் தால் மட்டுமே மண் கிடைக்கும் என  மண் தர மறுத்துவிட்டார்.  தங்களிடமே டிராக்டர், லாரி உள்ளிட்ட வாகனங்கள் உள்ளதால் எங்கள் வாகனத்திலேயே மண்  வழங்கும்படியும், அரசு நிர்ண யித்துள்ள மண் விலையை வழங்கு வதாகவும் கூறியுள்ளனர். ஆனால் இதற்கு குவாரி நடத்துபவர்கள் மறுத்  ததுடன், அரசு நிர்ணயித்த விலையை  விட கூடுதல் விலைக்கு மண்ணை விற்  பனை செய்ததாக தெரிகிறது.

 காத்திருக்கும் போராட்டம் இதனால் வாழ்வாதாரம் பாதிக் கப்பட்ட செங்கல் காளவாசல் உரிமை யாளர்கள் மற்றும் பணியாளர்கள் அகில இந்திய விவசாய தொழிலா ளர்கள் சங்கத்தின் ஆண்டிபட்டி ஒன்  றிய தலைவர் டி.ராஜேந்திரன் தலை மையில் 200-க்கும் மேற்பட்டோர் குப்பம்பட்டி பகுதியில் போராட்டத் தில் ஈடுபட்டனர்.  போராட்டத்தில் ஈடுபட்ட தலை வர்களுடன் ஆண்டிபட்டி காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் ராமலிங்கம், ஆண்டிபட்டி தாசில் தார் திருமுருகன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தை யில் உடன்பாடு எட்டாத நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆண்டிபட்டிக்கு வந்து, அங்கிருந்து தாலுகா அலுவலகத்திற்கு ஊர்வல மாக சென்று காத்திருப்புப் போராட் டத்தில் ஈடுபட்டனர்.  பின்னர் ஆண்டிபட்டி வட்டாட்சி யர் அலுவலகத்தில் விவசாய தொழி லாளர்கள் சங்க மாநிலத் தலைர் ஏ. லாசர் தலைமையில் செங்கல் காள வாசல் உரிமையாளர்கள், தொழிலா ளர்கள், வட்டாட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் பேச்சு பேச்சுவார்த்தை நடைபெற் றது.  

சுமார் இரண்டு மணி நேரம் நடை பெற்ற பேச்சுவார்த்தையில் செவ் வாய்க்கிழமை மண் குவாரி உரிமை யாளர்கள், செங்கல் காளவாசல்  உரிமையாளர்கள் இருதரப்பினரை யும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு சுமூக முடிவு எட்டலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இத னையடுத்து காத்திருப்பு போராட்டத் தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்ற னர். போராட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் ஏ.வி.அண்ணாமலை, மாவட்  டச் செயற்குழு உறுப்பினர் டி.வெங்க டேசன், ஒன்றியச் செயலாளர் மீனாட்சி  சுந்தரம், மாவட்டக்குழு உறுப்பினர் மா.தங்கராஜ், விவசாய தொழிலா ளர்கள் சங்க மாவட்டத் தலைவர் சங்கரசுப்பு, மாவட்டப் பொருளாளர் கே.தயாளன், விவசாய தொழிலா ளர்கள் சங்க ஒன்றியத் தலைவர்  ராஜேந்திரன், செங்கல் காளவாசல்  உரிமையாளர்கள் சங்க தலைவர்கள் ஆர்.சக்திவேல், வி.முருகன், ஆர்.முத்துராஜ், சின்ன ராமர், தங்கராஜ், பி.முத்துராஜ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.