districts

தேனியில் ‘கடசல்’ நாவல் வெளியீட்டு விழா

தேனி, பிப்.28- எழுத்தாளர் காமுத்துரை எழுதி ஜீரோ டிகிரி தமிழரசி அறக் கட்டளை போட்டியில் முத்திரை நாவலென வந்த கடசல் நாவலின் அறிமுகவிழா தேனி தெய்வா ஹோட்டல் அரங்கில் நடை பெற்றது.  கூட்டத்திற்கு எழுத்தாளர் அல்லிஉதயன் தலைமை வகித் தார். தமுஎகச மாவட்ட செயற் குழு உறுப்பினர் பா.ராமமூர்த்தி வரவேற்றார். மாநில துணைப் பொதுச்செயலாளர் கவிஞர் அ.லட்சுமிகாந்தன் துவக்கவுரை யாற்றினார்.  நாவலின் களம் மற்றும் மொழியின் சிறப்புகளை தேனி வட்டார வழக்கின் உயிர்ப்பினை காமுத்துரையின் படைப்புகளில் மட்டுமே காணமுடியும் என படைப்பு குறித்து ஆய்வாளர் எஸ்.எஸ்.பொன்முடி பேசினார். நாவலின் களம், கதாபாத்தி ரங்களின் நம்பகத்தன்மை இப்படித்தான் இவர்கள் இருந்தி ருக்க வேண்டும் எனும் சித்த ரிப்பினை இவரது ஒவ்வொரு படைப்பிலும் போல கடசலில் இன்னும் கவனமாக பதிவு செய்திருக்கிறார் என தமுஎகச மாநில பொதுச்செயலாளர் கே.வேலாயுதம் பாராட்டிப் பேசி னார்.  ‘‘கடசலைப் போல நூறு நாவல்கள் எழுதப்பட வேண்டும், உள்ளூர் மரபு சார்ந்த தொழில்க ளின் வரலாறும் அது கால மாற்றத்தில் அடையும் மாற்றங்க ளையும் கூர்மையாக பதிவு செய்திருக்கும் கலாப்புர்வமான படைப்பளியாக காமுத்துரை தனது ஒவ்வொரு நாவலின் வழியாக மெருகேறி வருகிறார். இவர் தமுஎகசவின் தேனி மாவட்டத்திற்கு மட்டமல்ல தமிழ் மாநிலத்தின் அடையாளம். கால மாற்றத்தை நுட்பமாகப் பதிவு செய்யும் இந்த நாவலை தொழிற்சங்கங்களும் தமிழ் இலக்கிய ஆய்வாளர்களும் கொண்டாட வேண்டும்” என தமுஎகச மதிப்புறு தலைவர் ச.தமிழ்செல்வன் பேசினார். மாவட்ட தலைவர் கவிஞர் இதய நிலவன், பட்டிமன்ற நடுவர் சேதுராம், கே.எஸ்.கே.நடேசன் வாழ்த்திப் பேசினர். கிளை செய லாளர் எஸ்.எல்.சுப்புராஜ் நன்றி கூறினார். இதில், மாநில செயற்குழு உறுப்பினர் மருது பாரதி, மாநி லக்குழு உறுப்பினர் நித்தியா னந்தம், கருணைகடல் மற்றும் திரளான இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொன்டனர்.