தேனி, பிப்.9- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் மகளிர் முன்னேற்றத்தில் தனிக்கவ னம் செலுத்திடும் வகையில் சாதாரண கட்டணப் பேருந்து களில் மகளிர் இலவசமாக பயணம் செய்யும் ஆணை வெளியிடப்பட்டது. இந்த திட்டம், பெண் களின் சமூக பொருளாதார நிலை மற்றும் பொருளாதா ரத்தின் வளர்ச்சியை மேம் படுத்தும் சிறப்பு திட்டமாக உள்ளது. இந்த கட்டண மில்லா பேருந்து பயணத்திட் டத்தின் மூலம் அன்றாட தேவை கள், கல்வி நிலையங்கள், சிறு, குறு தொழில் புரியும் மகளிர் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் எளிதாக சென்று வரமுடிகிறது. இதன் மூலம் மகளிர் மற்றவர்களின் துணையின்றியும், கட்டண மில்லாமலும் பயணம் மேற் கொள்ள முடிகிறது. இத்திட் டமானது, மகளிர் உட்பட அனைத்து தரப்பினரிடமும், மிகுந்த வரவேற்பை பெற் றுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தேனி மாவட்டத்தில் கடந்த ஜூலை 2021 முதல் ஜனவரி 2023 (29.01.2023) வரை சாதாரண கட்டண நகரப் பேருந்து களில் 3.51 கோடி மகளிரும், 3.81 லட்சம் மாற்றுத்திறனாளி களும், 15,617 மாற்றுத்திற னாளிகளின் உதவியாளர் களும், 14,136 திருநங்கை களும் என மொத்தம் 3.55 கோடி பேர் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொண் டுள்ளனர். இலவச பேருந்து பய ணத் திட்டத்தில் பயனடைந்த பயனாளி, தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியை சேர்ந்த கல்லூரி மாணவி கவிதா என்பவர் கூறுகை யில், நான் பழனிசெட்டிபட்டி பகுதியில் வசித்து வருகி றேன். தனியார் விடுதியில் தங்கியிருந்து அரசு சட்ட கல் லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறேன். எங்கள் குடும்பத்தில் என் தந்தை மட்டுமே வேலைக்கு செல்கிறார்.
என்னுடைய தந்தை யின் குறைந்த வருமானத்தை கொண்டு, வீட்டின் அன்றாட செலவுகள், இதர செலவு கள், என்னுடைய விடுதி மற் றும் பேருந்து பயண செலவு களையும் சமாளிக்க வேண் டும். எனது விடுதியிலிருந்து, தினமும் கல்லூரிக்கு சென்று வர பேருந்து கட்டணம் நாள் ஒன்றுக்கு ரூ.20 வரை செல வாகும். என் தந்தையின் வரு மானத்தில் கால் பங்கு என் விடுதி கட்டணம் மற்றும் பேருந்து கட்டணத்திற்கே வழங்க வேண்டிய சூழ்நிலை இருந் தது. இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த மக ளிர் இலவச பேருந்து பயண திட்டத்தின் கீழ் தினமும் கல்லூரிக்கு நகரப் பேருந் தில் கட்டணமில்லாமல் பய ணம் செய்து வருகிறேன். இத னால் எனக்கு மாதம் ரூ.600 வரை செலவு குறைந்து உள் ளதால், என்னால் தனிப்பட்ட முறையில் பணம் சேமிக் கப்படுகிறது. இத்திட்டம் எனக்கு மட்டுமில்லாமல் என்னை போன்ற கல்லூரி செல்லும் அனைத்து பெண் களுக்கு மிகவும் பயனுள்ள தாக இருக்கிறது. இத்திட் டத்தை தந்த முதலமைச்ச ருக்கு மனமார்ந்த நன்றி யினை தெரிவித்துக் கொள்கி றேன் என்று கூறினார். இத்தகவலை தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சு.ஜெக வீரபாண்டியன், உதவி மக் கள் தொடர்பு அலுவலர் (செய்தி) நா.விஜயகுமார் ஆகியோர் தெரிவித்துள்ள னர்.