districts

img

கண்மாய்களில் விவசாய நிலங்களுக்கு மண் எடுக்க சிறப்பு முகாம் நடத்துக! குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

தேனி, பிப்.17- அரசு குளம் மற்றும் கண்மாய்களில் விவசாய நிலங்களுக்கு தேவையான மண் எடுக்க சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  தேனி மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வேளாண்மைத் துறை இணை இயக்குநர் கா.செந்தில்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பொ.தனலட்சுமி மற்றும் அனைத்து துறை மாவட்ட அளவிலான அலுவலர்கள் மற்றும் ஏராளமான விவ சாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதி கள் கலந்து கொண்டனர்.   நெல் அறுவடைக்குப் பின் மண் வளம் குறைந்து வருவதால் அதனை சரி  செய்ய ஊராட்சி, பேரூராட்சி மற்றும் பொ துப்பணித்துறையின் கீழ் உள்ள கண்மாய்க ளில் மண் எடுத்து அதனை விவசாய நிலத்திற்கு பயன்படுத்த வழிவகை செய்து  சிறப்பு முகாம் நடத்த வேண்டும். பிம்.கிசான் தொகை காலதாமதமின்றி விரைந்து கிடைத்திட வழிவகை செய்திட வேண்டும். கம்பம் மற்றும் கூடலூர் பகுதிகளில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். ஒட்டணை முதல் தெப்பம்பட்டி வரை விவசாயத்தி ற்கு வாய்க்கால் திட்டம் கொண்டு வர வேண்டும். குன்னூர் பகுதியில் ஆற்றை தூர்வார  வேண்டும். வடக்குமலை விவசாயி களுக்கு சோலார் லைட் வழங்க வேண்டும். ஓடைப்பட்டி ஊஞ்சாலம்மன் கண்மா யில் கண்மாய் கரை அமைத்து தரவும், குன்னூர் பகுதியில் ஆற்றை தூர்வாரிட வும், வடக்கு மலை விவசாயிகளுக்கு சோலார் லைட் வழங்க வேண்டும். அக மலைப் பகுதியில் ஆரஞ்சு பயிர் சாகுபடி அதிகரித்திட ஆரஞ்சு அவகோடா, மிளகு மற்றும் எலுமிச்சை நாற்றுகள் விவசாயி களுக்கு மானிய விலையில் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.