districts

img

பேராவூரணி ஆனந்தவள்ளி வாய்க்கால் சீரமைக்கப்படுமா?

தஞ்சாவூர், ஜூன் 16- பேராவூரணி நகரின் மையப் பகுதியில், நகருக்கு அழகு சேர்க்கும் வகையிலும், ஆயி ரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களுக்கு பாசன வசதி தரும் ஆனந்தவள்ளி வாய்க்கால், கொஞ்சம், கொஞ்சமாக கழிவுநீர் ஓடையாக மாறி வருகிறது. இதனை சீரமைத்து தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.  இதுதொடர்பாக சிபிஎம் ஒன்றியச் செய லாளர் எம்.இந்துமதி, நகரச் செயலாளர் வே. ரெங்கசாமி ஆகியோர் கூறியிருப்பதாவது:  ஆனந்தவள்ளி வாய்க்கால் முறையாக பராமரிக்கப்படாததால், இரு கரைகளும் பல இடங்களில் சேதமடைந்துள்ளது. மேலும், நீர்  ஒழுங்கிகள், குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலங்கள் உடைந்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.  குறிப்பாக பொதுப்பணித்துறை அலுவல கத்தில் இருந்து சுமார் 600 மீட்டர் தூரத்தில், மேற்கே, டாக்டர் காந்தி மருத்துவமனை அருகில், தீயணைப்பு நிலையம் செல்லும் வகையில் உள்ள, பழமையான பாலம், எப்போது இடிந்து விழுமோ என்ற அபாய நிலையில் உள்ளது.  மேலும், பொதுமக்கள் குப்பைகளை கொட்டுவதை தடுக்கவும், வீடுகளின் கழிவுநீரை, குழாய் பதித்து, வாய்க்காலில் விடு வதையும் தடுத்து, ஆனந்தவள்ளி வாய்க் காலை பாதுகாக்கவும், இடிந்து விழும் நிலையில் உள்ள பாலங்களை, உடைத்து அகற்றி விட்டு, புதிய பாலம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.