கும்பகோணம், ஜூன் 22 - விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத் தொகை குறித்து தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்துடன் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருமண்டங்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலை பல ஆண்டு களாக இயங்கி வந்தது. கடந்த 5 வரு டத்திற்கு முன்பு ஆலையில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ஆலை நிர்வாகத்தி னர் ஆலையை மூடினர். அப்பொழுது ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயி களுக்கு வழங்க வேண்டிய ரூ.100 கோடி ரொக்கப் பணம் மற்றும் விவசாயி கள் பெயரில் ஆலை நிர்வாகம் வங்கிகளில் பெற்ற ரூ.350 கோடியை விவசாயிகளுக்கு தராமல் இருந்தது. இதனால் விவசாயிகள் பல கட்ட போராட்டங்கள் நடத்தியும், அவர் களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை. இந்நி லையில் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம், வேறொரு தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்திடம் விலைபேசி ஆலையை விற்பனை செய்து விட்டது. கடந்த ஜூன் 10 ஆம் தேதி புதிதாக விலைக்கு வாங்கிய தனியார் நிறுவனத் தினர் பூஜை போட வந்தனர். இதை யறிந்த விவசாயிகள் பூஜைக்கு வந்த நிறுவன அதிகாரிகளை மறித்தனர். இதையறிந்த காவல்துறையினர், வரு வாய்த் துறையினர் விரைந்து வந்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில், ‘வருகிற ஜூன் 15 ஆம் தேதி விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்திய பின் ஆலை திறக்கப் படும்’ என உறுதியளித்தனர். இதனடிப்படையில் ஜூன் 15 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்பட வில்லை.
இதனால் விவசாயிகள் திடீரென கும்பகோணம் - தஞ்சாவூர் சாலை உத்தாணி அருகே மறியலில் ஈடுபட்ட னர். பிறகு அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, ஜுன் 21 ஆம் தேதி தனியார் சர்க்கரை ஆலை வளாகத்தில் கும்பகோணம் கோட்டாட்சியர் முன்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறி வித்தனர். அதன் அடிப்படையில், தனியார் சர்க்கரை ஆலை வளாகத்தில் கும்ப கோணம் கோட்டாட்சியர் லதா தலைமை யில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில், விவசாயிகள் தங்களுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத் தொகை முழுவதையும் வழங்க வேண்டும். வாகனங்கள் மற்றும் வெட்டுக் கூலி ஆகியவற்றை முழுமையாக வழங்க வேண்டும். விவ சாயிகள் பெயரில் வங்கியில் பெற்ற கடன்கள் அனைத்தையும் கட்டி முடிக்க வேண்டும். இதனை செய்து முடித்துவிட்டு, ஆலையை திறந்து நடத்துங்கள் என வலியுறுத்தினர். இந்நிலையில், புதிதாக அந்த ஆலையை விலைக்கு வாங்கிய தனியார் சர்க்கரை ஆலையின் முதன்மை அதிகாரியும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான முனுசாமி மற்றும் அந்நிறுவனத்தைச் சேர்ந்த கந்த சாமி ஆகியோர், இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
காவல்துறை சார்பில் பாபநாசம் டிஎஸ்பி பூரணி, ஆய்வாளர்கள் அனிதா கிரேசி, அழகம்மாள், பாபநாசம் தாசில்தார் மதுசூதனன், வருவாய் ஆய்வாளர் சுகுணா, விவசாயிகள் சங்கம் சார்பில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநிலத் தலை வர் அய்யாக்கண்ணு, விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், தஞ்சை மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் முத்துச் செல்வன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தாமரைச்செல்வன், ஒன்றிய கவுன்சிலர் ஹாஜாமைதீன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் பிரபாகரன், பால சுப்பிரமணியன், ஜெகநாதன், செல்வ ராஜ் உட்பட 600-க்கும் மேற்பட்ட விவ சாயிகள் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையில் உடன் பாடு எட்டப்படாததால், கும்பகோணம் கோட்டாட்சியர் லதா, தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரி டம் இப்பிரச்சனை குறித்து விளக்கிக் கூறி, அவர் வழிகாட்டுதலின்படி அடுத்த கட்ட கூட்டம் நடத்துவது பற்றி முடிவு செய்யப்படும் என கூறினார். இதனால் ஆலை நிர்வாகத்திற்கும் விவசாயிகளுக்கும் உடன்பாடு ஏற்படாத தால் தற்சமயம் ஆலையை துவங்கு வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.