districts

img

திருவோணம் அருகே அனுமதி இன்றி இயங்கிய பட்டாசு பட்டாசு குடோன் வெடித்து இரண்டு பேர் பலி

தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் வட்டம், நெய்வேலி தென்பாதியில் அனுமதி இன்றி வெடி தயாரித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 

இதையடுத்து, பொதுமக்கள் திரண்டு வந்து பார்த்த போது வெடி விபத்தில் இரண்டு பேர் இறந்து கிடந்தது தெரியவந்தது. தகவல் அறிந்த, வாட்டாத்திக்கோட்டை காவல்துறையினர் மற்றும் பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார், ஒரத்தநாடு துணை காவல் கண்காணிப்பாளா் கார்த்திகேயன், திருவோணம் வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும், கரம்பக்குடி தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து, புதுக்கோட்டை மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் சத்தியகீர்த்தி  தலைமையில் தீயணைப்பு மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து அங்கு வெடி விபத்தில் உடல் சிதறி  பலியான நெய்வேலி தென்பாதி  பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராசு. (வயது  60), அதே பகுதியைச் சேர்ந்த ரியாஸ், (வயது18), ஆகியோரது உடலை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பட்டாசு குடோன் விபத்து சம்பந்தமாக அலுவலர்கள் விசாரணை செய்து வருகின்றனர்,