கும்பகோணம், மார்ச் 11 - தஞ்சாவூர் மாவட்டம் திருவிடை மருதூர் ஒன்றியத்திற்குட்பட்ட 35 ஊராட்சிகளில் இருந்து பொதுமக்க ளுக்கு பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 219 பயனா ளிகளுக்கு வீடு கட்ட பணி அர சாணை வழங்கும் விழா நாச்சியார் கோயில் அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திருவிடைமருதூர் ஒன்றிய பெருந்தலைவர் சுபா.திருநாவுக் கரசு தலைமை வகித்தார். 219 வீடு கட்டும் பணி அரசாணையை தமிழக அரசு தலைமை கொறடா கோவி.செழியன், மயிலாடுதுறை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ராம லிங்கம் ஆகியோர் வழங்கினர். விழாவில் நாச்சியார்கோவில் ஊராட்சி மன்ற தலைவர் மகே ஸ்வரி உமாசங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர் கூத்தரசன், ஆணை யர் முருகன் மற்றும் ஊராட்சி செய லர்கள், மாவட்ட கவுன்சிலர் சரவணன் மற்றும் ஒன்றிய கவுன்சி லர்கள் கலந்து கொண்டனர்.