districts

img

மூதாட்டியின் கண்கள் தானம்

பேராவூரணி, பிப்.2-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள, கொன்றைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர், எஸ்.கே.இராம மூர்த்தி, லயன்ஸ் மாவட்டத் தலைவர், இவரது தம்பி  எஸ்.கே.லட்சுமணன் விவசாயி. இவர்களது தாயார்  கோவிந்தம்மாள் (94), வயது முதிர்வால் செவ்வாய்க்கிழமை காலமானார்.  இதையடுத்து இவரது இரு கண்களையும் தானம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்தனர். பேராவூரணி லயன்ஸ் சங்கம் ஏற்பாட்டில் குருவிக்கரம்பை மருத்துவர் மணி, மூதாட்டியின் இரு கண்களையும் அகற்றி, கும்பகோணம் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.  அப்போது, லயன்ஸ் சங்கத் தலைவர் ஜெ.இராமநாதன், செயலாளர் ஆதித்தியன், பொருளாளர் பன்னீர்செல்வம், மாவட்டத் தலைவர் வைரவன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.