. தஞ்சாவூர், டிச.9- தஞ்சாவூர் மாவட்டம் திருமண்டங் குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை முன்பாக தமிழ்நாடு கரும்பு விவ சாயிகள் சங்கத்தின் சார்பாக 10 ஆவது நாளான வெள்ளியன்றும் தொடர் போராட்டம் நடைபெற்றது. திருஆருரான் சர்க்கரை ஆலையை நடத்தி வந்த ராம் தியாக ராஜன், விவசாயிகளுக்கு தர வேண்டிய கரும்பு பணம் சுமார் 85 கோடி ரூபாய்க்கும் அதிகமாக தரா மல் ஏமாற்றியுள்ளார். மேலும், விவ சாயிகள் பெயரில், விவசாயி களுக்கு தெரியாமலேயே ரூ.300 கோடிக்கும் மேலாக கடன் பெற்றுள் ளார்
விவசாயிகளை ஏமாற்றும் ஆலை நிர்வாகம்
இந்நிலையில் திருஆரூரான் சர்க்கரை ஆலையை கார்ல்ஸ் டிஸ்டில்லரிஸ் என்ற நிறுவனம் கடன் தீர்ப்பாயத்தின் மூலம் புதிதாக வாங்கியுள்ளது. இந்நிலையில், கடன் தொ கையை திரும்ப தரச் சொல்லி வங்கி களில் இருந்து விவசாயிகளுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இதையடுத்து விவசாயிகளுக்கு வர வேண்டிய கரும்பு பாக்கித் தொகை யையும், விவசாயிகள் பெயரில் உள்ள கடன்களையும், புதிய ஆலை நிர்வாகத்தின் பெயருக்கு மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி யும் பல கட்டப் போராட்டம் நடத்தி வந்தனர்.
காத்திருப்பு போராட்டம்
இதில் உரிய தீர்வு ஏற்படாத நிலை யில், கடந்த 10 தினங்களாக ஆலை முன்பு புயல், கனமழை என எதை யும் பொருட்படுத்தாமல் அங்கேயே பந்தல் அமைத்து தங்கி, சமைத்து சாப்பிட்டு இரவு, பகலாக விவசாயி கள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். வெள்ளிக்கிழமை கொட்டும் மழையிலும் குடைகளை பிடித்தவாறு ஏராளமான விவ சாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இன்று ஆர்ப்பாட்டம்
கரும்பு விவசாயிகளின் பிரச்ச னையை தீர்த்து வைக்க வேண்டும் என வலியுறுத்தி டிசம்பர் 10 ஆம் தேதி (சனிக்கிழமை) தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட் டம் நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது. கரும்பு விவசாயிகள் போராட்டத் திற்கு ஆதரவாக, கீழ்வேளூர் எம்எல்ஏ நாகைமாலி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர்கள் தங்க.காசிநாதன், நாராயணசாமி, மாநிலத் தலைவர் வேல்மாறன், மாநிலப் பொருளா ளர் பெருமாள், தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், மாவட்டப் பொரு ளாளர் எம்.பழனி அய்யா, சிபிஎம் தஞ்சை மாவட்ட செயலாளர் சின்னை. பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கோ. நீலமேகம், ஆர்.மனோகரன், என்.கணேசன், பி.எம்.காதர் உசேன் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர். மேலும், அனைத்து சமய நிலங் களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்டத் தலைவர் சா.ஜீவபாரதி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் முரளிதரன் (பாபநாசம்), திருவையாறு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் எம்.ராம், ஒன்றியப் பொருளாளர் கதிரவன், விவசாயிகள் சங்க கும்பகோணம் ஒன்றியத் தலைவர் குணசேகரன், துணைத் தலைவர் ராஜா, திருவி டைமருதூர் வி. ச வடக்கு ஒன்றியச் செயலாளர் சுந்தர், தஞ்சாவூர் மாவட்ட சமூக வலைதளக் குழு உறுப்பினர்கள் ஆர்.கலைச்செல்வி, என்.சரவணன், எஸ்.ராமசாமி, பிரதீப் ராஜ்குமார் மற்றும் முக்கிய நிர்வாகி கள், பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகளைச் சேர்ந்த வர்கள் ஆதரவு தெரிவித்துப் பேசினர்.
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம்
இதுகுறித்து, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூறு கையில், “திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் ஒன்றிய அரசு, மாநில அரசு நிர்ணயித்த விலை, லாபப் பங்குத் தொகை, வட்டித் தொகை என 85 கோடி ரூபாய்க்கும் அதிகமாக விவசாயிகளுக்கு தர வேண்டியுள்ளது. இந்த நிலுவைத் தொகையை ஒரே தவணையாக வழங்க வேண்டும். திருமண்டங்குடி திருஆருரான் கரும்பாலை நூதனமான முறையில் மோசடி செய்து விவசாயிகள் பெய ரில் கடன் பெற்றுள்ளது. விவசா யிகள் பெயரில் உள்ள கடன்களை ரத்து செய்து, கரும்பு ஆலை நிர்வா கத்தின் பெயருக்கு மாற்ற வேண்டும். புதிதாக ஆலையை வாங்கியுள்ள கார்ல்ஸ் டிஸ்டில்லரீஸ் நிறுவனம் மோசடியான முறையில், கரும்புத் தொகைக்கு 57 விழுக்காடு மட்டும் பெற்றுக் கொள்வோம் என விவசாயி களை மிரட்டி கையொப்பம் பெற்று வருகிறது. அதையும் 5 தவணை களாக ஓராண்டுக்குள் பெற்றுக் கொள்வோம் என கையெழுத்து போடும்படி விவசாயிகளிடம் சொல்லி வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் திரு ஆருரான் சர்க்கரை ஆலை நிறுவன அதிபர் ராம் தியாகராஜனை கைது செய்து வழக்கு தொடர வேண்டும். புதிதாக ஆலையை நிர்வகித்து வரும் கார்ல்ஸ் நிறுவனம் விவசாயி களை மிரட்டி கையெழுத்து வாங்கும் போக்கை தவிர்க்க வேண்டும்” என்றனர்.
தமிழக அரசு தலையிட வேண்டும்:சாமி.நடராஜன்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் மாநில பொதுச் செயலாளர் சாமி. நடராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தஞ்சாவூர் மாவட்டம் திரு மண்டங்குடி திருஆருரான் சர்க்கரை ஆலை தொடர்பாக, தமிழக முதல மைச்சர் உடனடியாக தலையிட்டு கரும்பு விவசாயிகள் பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும். விவசாயி கள் தொடர்ந்து பல கட்டங்களாக போராட்டங்கள் நடத்தி வருகின்ற னர். அவர்களுக்கான கரும்பு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு தெரி யாமலேயே அவர்கள் பெயரில் பெற்றுள்ள கடன்களை, புதிய ஆலை நிர்வாகத்தின் பெயருக்கு மாற்ற வேண்டும். ‘விவசாயிகளுக்கு கடன் பாக்கி இல்லை’ என சான்றிதழ் வழங்க வேண்டும். எனவே இந்த பிரச்சனையில் தமிழக முதல மைச்சர் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் சார்பில் கேட்டுக் கொள் கிறோம்” என கூறப்பட்டுள்ளது.