districts

சோலார், வேளாண் இயந்திரங்கள் பழுது நீக்கும் மையம் அமைக்க மானியம்

தஞ்சாவூர், மே 30-  தமிழக அரசு வேளாண்மைப் பொறி யியல் துறையின் மூலம் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் “வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய  சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் பழுது நீக்கும் பராமரிப்பு மையம்” மானியத்தில் அமைக்கும் புதிய திட்டம்  செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகள் தங்கள் வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை தங்கள்  விளைநிலங்களிலேயே பழுது நீக்கி  பராமரிக்கவும், விவசாயிகள் வேளாண்  பணிகளை எவ்வித இடர்ப்பாடுகளு மின்றி குறித்த நேரத்தில் செய்திடவும், கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை  வாய்ப்பை உருவாக்கிடவும் நிலையான  வருமானம் ஈட்டி பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடனும் இம்மை யங்கள் அமைக்கப்படுகின்றன.   தொழில் முனைவோர், விவசாய  குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியா ளர் நிறுவனங்களுக்கு இம்மையங்கள் மானியத்தில் அமைத்துத் தரப்படும். இம்மையங்கள் ரூ.8 லட்சம் செலவில் அமைக்கப்படுகின்றன. இதில் 50 விழுக்காடு மானிய அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.4 லட்சம் மானியம் வழங்கப்படும். மையங்கள் அமைக்க போதிய  இடவசதியும், மும்முனை மின்சார  இணைப்பும் கொண்ட கிராமப்புற இளை ஞர்கள், தொழில் முனைவோர்கள், விவ சாய குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தி  நிறுவனங்கள் தங்கள் அருகாமையில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகங்களை அணுகி விண்ணப்பத்தை அளிக்கலாம்.  

 மாவட்ட ஆட்சியரின் மாவட்ட அளவி லான கூட்டத்தில் ஒப்புதல் பெற்ற பின்னரே பயனாளிகளுக்கு இம்மையம் மானியத்தில் அமைத்துத் தரப்படும். மையங்கள் அமைக்கத் தேவையான இயந்திரங்கள் ஒப்பந்தப்புள்ளி அடிப்ப டையில் கண்காணிப்புப் பொறியாள ரால் (வே.பொ) முடிவு செய்யப்பட்டு,  பயனாளிகள் மொத்தத் தொகையினை  செலுத்தி வாங்கிக் கொள்ளலாம். பின்னர் சம்பந்தப்பட்ட உதவி செயற் பொறியாளர் (வே.பொ) மையத்தினை நேரில் ஆய்வு செய்து திருப்தி அளிக்கும்  வகையில் இருப்பின் மானியத் தொகை யினை பயனாளியின் வங்கிக் கணக்கில்  பின்னேற்பு மானியமாக செலுத்தப்படும். தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவை யாறு, பூதலூர் மற்றும் திருவோணம் வட்டாரங்களை சார்ந்தவர்கள் தஞ்சா வூர் உபகோட்ட உதவி செயற்பொறியா ளர் (வே.பொ) அலுவலகம், எண்.15, கிருஷ்ணா நகர், மனோஜிபட்டி ரோடு,  மருத்துவக் கல்லூரி அஞ்சல், தஞ்சா வூர்- 613 004 என்ற முகவரியிலும், கும்ப கோணம், அம்மாபேட்டை, பாபநாசம், திருவிடைமருதூர் மற்றும் திருப்பனந் தாள் வட்டாரங்களை சார்ந்தவர்கள் கும்பகோணம் உபகோட்ட உதவி செயற் பொறியாளர்(வே.பொ) அலுவலகம், தொழில்பேட்டை அருகில், திருபு வனம், திருவிடைமருதூர் தாலுகா, கும்ப கோணம் - 612 103 என்ற முகவரியிலும்.  பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேரா வூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் வட்டாரங்களை சார்ந்தவர்கள் பட்டுக் கோட்டை உபகோட்ட உதவி செயற்பொ றியாளர் (வே.பொ) அலுவலகம், ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகம், பாளையம், பட்டுக்கோட்டை - 614 601  என்ற முகவரியிலும் அணுகி விண்ணப்பத் தினை அளித்து பயன் பெறலாம் என  தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.