districts

சிறுமிக்கு பாலியல் தொல்லை சத்துணவு அமைப்பாளருக்கு 5 ஆண்டுகள் சிறை

தஞ்சாவூர், ஏப்.23 - 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சத்துணவு அமைப்பாளருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. தஞ்சாவூர் அருகே வாண்டையார் இருப்பு  ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சத்து ணவு அமைப்பாளராக பணியாற்றி வந்தவர்  ரவிச்சந்திரன் (55). இவர் கடந்த 20.9.2018  அன்று 9 வயது சிறுமியை தனியாக அழைத்து  சென்று பாலியல் தொல்லை கொடு‌த்துள் ளா‌ர். பின்னர் சிறுமி அழுது கொண்டே வந்ததை பார்த்து சக ஆசிரியர்கள் விசாரித்த போது, ரவிச்சந்திரன் பாலியல் தொல்லை கொடுத்ததை தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிந்ததும், அவர்கள் வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார்  அளித்தனர். இதுதொடர்பான வழக்கு தஞ்சா வூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடை பெற்று வந்தது.  இந்த வழக்கை விசாரித்த நீதிபதி,  சத்துணவு அமைப்பாளரான ரவிச்சந்திர னுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும், கட்டத் தவறி னால் மேலும் ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும், அபராத  தொகையில் ரூ.25 ஆயிரத்தை பாதிக்கப் பட்ட சிறுமிக்கு வழங்க வேண்டும் என வெள்ளிக் கிழமை உத்தரவிட்டார்.