மெலட்டூர், நவ.5 - தஞ்சாவூர் மாவட்டம் மெலட் டூர் அருகே கொத்தங்குடி ஊராட்சி, உதாரமங்களம் கிரா மத்தில் 100 ஏக்கரில் நெல் நடவுப் பணி நடந்து 15 நாட்களாகின்றன. இந்நிலையில் கடந்த இரு தினங் களுக்கு முன்பு பெய்த மழை யால் வயல்களில் தேங்கியது. இன்றுவரை மழைநீர் வடியாத தால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி விவ சாயிகள் கூறுகையில், “நெல் நடவு நடந்து 15 நாட்களாகின்றன. நேரடி தெளிப்பு நடந்து 45 நாட்களாகின்றன. இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு பெய்த மழை யால் வயல்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இப்பகுதி வழியேச் செல்லும் ரெகுநாத காவிரி பாசன வாய்க்கால் எங்களுக்கு வடி காலாக செயல்படுகிறது. இந்த வாய்க்கால் தஞ்சாவூரை அடுத்த கூடலூரில் வெண்ணாற் றிலிருந்து பிரிந்து, திருவாரூர் மாவட்ட விளத்தூர் வரை செல்கிறது. இதை கடந்த 5 ஆண்டுகளாக தூர்வாரவில்லை. இதனால் மழை நீர் வடிய இடமில்லாமல் போனது. மேலும் வாய்க்காலில் உடைப்பெடுத்தும் தண்ணீர் வயலில் புகுந்து விட்டது. ஏக்க ருக்கு ரூ. 20 ஆயிரம் வரை செலவு செய்துள் ளோம். தமிழக அரசு எங்களுக்கு நிவாரண மாக ரூ.20,000 தர வேண்டும் என கோரியுள் ளனர்.