தஞ்சாவூர், பிப்.2- தஞ்சாவூர் மாவட்டத்தில், வியாழக்கிழ மை இடைவிடாது மழை பெய்தது. இதனால் சம்பா நெல் அறுவடையும், கொள்முதல் நிலையத்தில் மழையின் காரணமாகக் கொள்முதல் பணிகளும் பாதிக்கப்பட்டது. தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம், பேராவூரணி ஆகிய பகுதிகளில் மழையின் காரணமாக நெற்கதிர்கள் வயலில் சாய்ந்துள்ளது. வயலில் மழைநீர் தேங்காததால் இந்த நெல்மணிகளுக்குப் பாதிப்பு ஏதும் இல்லை. தொடர்ந்து மழை பெய்தால் நெல்மணிகள் உதிர்ந்து பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்படும். மழையின் காரணமாக அறுவடை செய்யப்பட்ட நெல் வயல்களில் வைக் கோல்கள் கட்ட முடியாமல் பணிகள் பாதிக்கப்பட்டது. அதே போல் அறுவடை க்குத் தயாரான நெல்லையும் அறுவடை செய்ய முடியவில்லை. தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா நெல் கொள்முதல் செய்ய 360 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்ட நிலையில், பல இடங்களில் கொள்முதல் செய் யாததால் நெல் மூட்டைகள் தேங்கியுள்ளது. வியாழக்கிழமை பெய்த மழையினால் நெல்லின் ஈரப்பதம் 19 விழுக்காட்டுக்கும் மேலாக அதிகரித்ததால் கொள்முதல் பணிகள் நடைபெறவில்லை. பல கிராமங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விவசாயிகள் தார்ப்பாய் கொண்டு மூடி வைத்திருந்தனர். தாளடிக்கு உகந்த மழை: செங்கிப்பட்டி, பூதர் உள்ளிட்ட பகுதிகளில் தாளடி பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் தற்போது கதிர் வரும் நிலையில் உள்ளன. இந்த பயிருக்கு தற்போது பெய்து வரும் மழை மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் எனவும், ஒரத்தநாடு, திருவோணம், வல்லம், மருங்குளம் உள்ளிட்ட மானாவாரிப் பகுதி களில் சாகுபடி செய்துள்ள நிலக்கடலை மற்றும் சோளம் ஆகிய பயிர்களுக்கு தற்போது பெய்து வரும் மழை பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.