districts

கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் ச.இராமநாதன் காலமானார்

தஞ்சாவூர், மார்ச் 7 - தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் ச.இராமநாதன் (82) உடல் நலக்குறைவு காரணமாக திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சனிக்கிழமை மாலை காலமானார். இவர் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் 1983 ஆம் ஆண்டு முதல் 1997 ஆம் ஆண்டு வரை தலைவராகவும், 2000 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை செயலராகவும் பணியாற்றியவர். 2021 ஆம் ஆண்டு முதல் மீண்டும் தலைவராகப் பொறுப்பேற்று பணியாற்றி வந்தார். இவர் உமா மகேசுவரனார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், உமா மகேசுவரனார் கல்வியியல் கல்லூரி, தி.ச. பழனிச்சாமி பிள்ளை தொழிற்பயிற்சி மையம் போன்றவற்றை நிறுவியவர். கரந்தைப் புலவர் கல்லூரியைத் தமிழ்வேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரியாகத் தரம் உயர்த்தியவர். கரந்தைத் தமிழ்ச் செம்மல், செயல் மாமணி, செம்மொழி வேளிர் போன்ற விருதுகளைப் பெற்றவர். இவருக்கு மனைவி லட்சுமிகாந்தம், மகள்கள் மாலதி, கரந்தைக் கல்லூரி முதல்வர் இரா. இராசாமணி, மகன்கள் கரந்தைத் தமிழ்ச் சங்கச் செயலர் இரா.சுந்தரவதனம், லண்டனில் மருத்துவராகப் பணியாற்றி வரும் இரா.சாமிநாதன் ஆகியோர் உள்ளனர். இவரது பேரன் செந்தமிழ்ச்செல்வன் தஞ்சாவூர் மாநகராட்சியின் முதலாவது வார்டு உறுப்பினராக வெற்றி பெற்றார். அன்னாரது இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமை (மார்ச் 8) காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது. தொடர்புக்கு: 9994494491