பட்டுக்கோட்டை, ஜன.2- பட்டுக்கோட்டை பேருந்து நிலை யத்தை இடம் மாற்றக்கூடாது என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக் கோட்டை நகராட்சிப் பகுதி முக்கிய வர்த்தக மையமாகவும், பல கிராமங் களை சேர்ந்த பொதுமக்கள் வந்து செல்லும் முக்கிய இடமாகவும் உள் ளது. இங்குள்ள பேருந்து நிலையத் தில் இடநெருக்கடி இருப்பதால், சாந் தாங்காடு பகுதியில் ரூ.20 கோடி மதிப் பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான இடத்தை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலி வர், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பி னர் ச.சு.பழநிமாணிக்கம், பட்டுக் கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா. அண்ணாதுரை மற்றும் அலுவலர்கள் ஆய்வு செய்துள்ளனர். புதிய இடத்தில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டால், பொதுமக்கள், பயணிகள் வெகுவாக பாதுகாக்கப் படுவார்கள் என்ற கருத்து எழுந்துள் ளது. பட்டுக்கோட்டை புதிய பேருந்து நிலையம், மற்றும் அருகிலேயே உள்ள பழைய பேருந்து நிலையம் ஆகிய வற்றை இணைத்து ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க வேண் டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர் கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர் பட்டுக்கோட்டை வழக்குரைஞர் ஆர்.ரமேஷ் தமிழக முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில், ‘‘பட்டுக் கோட்டை நகரத்தில் தற்போது இயங்கி வரும் பேருந்து நிலையம் நல்ல முறை யில் இயங்கி வருகிறது. இந்தப் பேருந்து நிலையம் அருகில் பழைய பேருந்து நிலையம் உள்ளது.
பட்டுக் கோட்டை நகரில் இயங்கி வரும் புதிய பேருந்து நிலையத்துடன் பழைய பேருந்து நிலையத்தை இணைத்து ஒருங்கிணைந்த பேருந்து நிலையமாக மாற்றி அமைத்தால், பட்டுக்கோட்டை நகரத்திற்கு ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம் அமையும். தற்போது இயங்கி வரும் பேருந்து நிலையத்தின் அருகிலேயே ரயில்வே நிலையம், காவல் நிலையம், அரசு மருத்துவமனை, ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள், அரசு பள்ளிகள், தனி யார் கிறிஸ்தவ பள்ளிகள், ஒருங்கி ணைந்த பதிவுத்துறை அலுவலகங் கள், தனியார் மருத்துவமனைகள், மருந்து கடைகள், திருமண மண்டபங் கள், நகராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், உழவர் சந்தை, மாவட்டக் கல்வி அலுவலகம், உண வகங்கள், வர்த்தக நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. பட்டுக்கோட்டை நகருக்குள் பாது காப்புடன் இயங்கி வரும் பேருந்து நிலையத்தை மாற்றி, சாந்தாங்காடு பகுதியில் பாலிடெக்னிக் கல்லூரி இயங்கும் இடத்திற்கு அருகே கொண்டு சென்றால், அனைத்து அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், பணியிடங்களுக்கு வந்து செல்வ தற்கு, பொதுமக்களுக்கு காலதாம தம் ஏற்படும்.
சாந்தாங்காடு பாலிடெக்னிக் கல் லூரி வழியாக சி.எம்.பி வாய்க்கால் கரையில் போடப்பட்டிருக்கும் குறுக லான சாலையில் பள்ளி, கல்லூரி பேருந்துகள் சென்று வரவே சிரமப் படும் சூழ்நிலை உள்ளது. புதிய பேருந்து நிலையம் அமையவுள்ள இந்த இடத்திற்கு உரிய சாலை வசதி கிடையாது. மேலும் பாசனத்திற்கு பயன்படும் சி.எம்.பி வாய்க்கால் உருக் குலைந்து விடும். பாசன வாய்க்கால் கழிவுநீர் ஓடையாக மாறி விடும். கடை மடை பாசனத்திற்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு, விவசாயம் பாதிக்கப்படும். புதிய பேருந்து நிலையம் அமைக் கப்பட போவதாக கூறப்படும் இடத்தில் உயர் அழுத்த மின் கம்பிகள் செல் கின்றன. இந்த வழியாக பேருந்துகள் சென்று வரும்போது பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். பல கோடிகளை முதலீடு செய்துள்ள நகர வர்த்தகர் களும், தொழில் நிறுவனங்களை நம்பி வேலை செய்யும் தொழிலாளர்களும் இந்த இடமாற்றத்தால் பாதிக்கப்படு வார்கள். மேலும், அரசுக்கு பல கோடி ரூபாய் வீண் செலவும், இழப்பும் ஏற்படும். குடி நீர் வடிகால் வாரியத்திற்கு சொந்த மான அந்த இடத்தில் பேருந்து நிலை யம் அமைத்தால், வளர்ச்சி அடைந்து வரும் பட்டுக்கோட்டை நகரத்தில் எதிர் காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற் படும். எனவே, புதிய இடத்தில் பேருந்து நிலையம் அமைக்காமல், ஏற்கனவே இயங்கி வரும் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்களை ஒருங்கி ணைத்து, ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். பட்டுக்கோட்டை நகர் மக்க ளின் நீண்ட நாள் கோரிக்கையான பாதாள சாக்கடைத் திட்டத்தை நிறைவேற்றி தர வேண்டும்’’ எனக் கூறியுள்ளார். மனுவின் நகல், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், நகராட்சி நிர்வாக மண்டல இயக்கு நர், நகராட்சி ஆணையர், பொதுப் பணித்துறை செயற்பொறியாளர், நகர வர்த்தக சங்கம் ஆகியவற்றிற்கு அனுப் பப்பட்டுள்ளது.