தஞ்சாவூர், மே 25- மூத்த குடிமக்களுக்கு நிறுத்தப்பட்ட சலுகைகளை மீண்டும் வழங்க வேண் டும் என பேராவூரணி வட்டார ரயில் பய னாளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள் ளது. தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி யில் நடைபெற்ற சங்கத்தின் கூட்டத் திற்கு, தலைவர் மெய்ஞான மூர்த்தி தலைமை வகித்தார். செயலாளர் ஏ.கே. பழனிவேலு, பொருளாளர் சி.கணேசன், அமைப்பாளர் கே.வி.கிருஷ்ணன், ஒருங் கிணைப்பாளர் பாரதி வை.நடராஜன், செயற்குழு உறுப்பினர்கள் ந.பழனி வேல், சிவ.பழனிவேல், வி.சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். “தற்போது காரைக்குடி - திருவா ரூர் அகல பாதையில் ஒரு டெமு ரயில் இயக்கப்படுகிறது. பயணிகள் நலன் கருதி கூடுதலாக டெமு ரயில் ஒன்று இயக்க வேண்டும். காரைக்குடி - சென்னை வழித்தடத்தில் பேராவூரணி வழியாக விரைவு ரயில் இயக்க வேண்டும். ஜூன் 4 முதல் வாரம் இரு முறை இயக்கப்பட உள்ள வேளாங் கண்ணி- எர்ணாகுளம் சிறப்பு ரயில் பேரா வூரணி ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மயிலாடு துறை - மதுரை பயணிகள் ரயிலை இயக்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கு கொடுத்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கட்டணச் சலுகை உள்ளிட்ட அனைத்து சலுகை களையும் ரயில்வே துறை மீண்டும் வழங்க வேண்டும்” என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.