பேராவூரணி, பிப்.24- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோயில் சார்பில் கூலித் தொழிலாளர்களான ஊமத்தநாடு கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கருக்கும், துறை யூர் கிராமத்தைச் சேர்ந்த பிருந்தாவுக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது. விழாவிற்கு, எம்எல்ஏ நா.அசோக் குமார் தலைமை வகித்தார். கோயில் செயல் அலுவலர் ரவிச்சந்திரன், அறநிலை யத்துறை ஆய்வாளர் அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் மணமக்க ளுக்கு தங்கத் தாலி முகூர்த்த புடவை, வேட்டி, சட்டை மற்றும் சீர்வரிசை பொருட் கள் வழங்கி திருமணம் நடத்தி வைக்கப் பட்டது.