தஞ்சாவூர், மார்ச் 12 - பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே, ஆத்தா ளூர் வீரமாகாளியம்மன் சாலையில், ரயில்வே கேட் கீழ் பாலம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரி வித்துள்ளனர். இதுகுறித்து, பேராவூரணி பேரூ ராட்சி 4 ஆவது வார்டு உறுப்பினர் த.முரு கேசன், வழக்குரைஞர் மணிகண்டன், அபிராமி கே.சுப்பிரமணியன் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் தென்னக ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் மற்றும் ரயில்வேத் துறை உயர் அலுவ லர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில், “திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதையில், பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே ஆத்தாளூரில், LC-117CE2 என்ற ரயில்வே கேட் உள்ளது. இந்த ரயில்வே கேட்டை நிரந்தரமாக மூடிவிட்டு ரயில்வே கீழ் பாலம் (Under Bridge) அமைப்பதற்கான ஆயத்தப் பணிகள் தற்சமயம் நடைபெற்று வருகின்றன. இந்த ரயில்வே கேட்டிற்கு அருகில், மாவடுகுறிச்சி கீழக்காடு (LC116CE2), பேராவூரணி டவுன் நீலகண்டபுரம் (LC121), சொர்ணக்காடு (LC132), ஆகிய இடங்களில் ரயில்வே நிர்வாகம் கீழ்பாலம் அமைத்துள்ளனர். இந்த கீழ்பாலங்கள் அனைத்தும், முறையான வடிவமைப்பு இல்லாமல், பாம்புபோல் வளைந்து இருப்பதால் பேருந்து, டிராக்டர், கதிர் அறுக்கும் இயந்திரம், லாரி போன்ற கனரக வாக னங்கள் சென்றுவர இயலாத நிலையி லும், மழைக்காலங்களில் மழைநீர் தரைப்பாலத்தில் தேங்கி, பாசி படர்ந்து குளம்போல் உள்ளதாலும் இத்தகைய கீழ்பாலங்கள் மக்கள் பயன்படுத்த முடி யாதபடி உள்ளன.
இதனால் மக்கள் மீண்டும் ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்லும் நிலையில் உள்ளனர். ரயில்வே நிர்வா கத்தால் அமைக்கப்பட்டுள்ள, கீழ் பாலங்களால் மக்கள் மிகுந்த அவதி யுற்று பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் எங்கள் பகுதியான ஆத்தாளூரில் ரயில்வே கேட்டை சுற்றி கீழ் பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. LC117CE2 ரயில்வே கேட், பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் காம்பவுண்ட் சுவரை ஒட்டி அமைந்துள்ளது. சுமார் 25 -க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தினமும் இந்த ரயில்வே கேட்டை கடந்துதான் வரு கின்றனர். இந்த இடத்தில் கீழ்பாலம் அமைந் தால் மழைக்காலத்தில் கீழ்பாலத்தில் மழைநீர் தேங்கி விபத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. மேலும் பள்ளிளை ஒட்டி ரயில்வே தண்டவாளம் உள்ள தால் கேட்கீப்பர்களின் கண்காணிப்பு அவசியமாக உள்ளது. எங்கள் பகுதி யில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் விவசா யம் நடைபெறுகிறது. மேற்படி கீழ்பாலம் அமைந்தால் விவசாயப் பணிக்காக டிராக்டர், கதிர் அறுக்கும் இயந்திரம், லாரி போன்ற வாகனங்கள் செல்ல முடி யாத நிலை ஏற்படும். மேலும் எங்கள் ஊரில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான புகழ்பெற்ற அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆத்தாளூர் வீரமாகாளியம்மன் கோ வில் உள்ளது. இந்த ஆலயத்திற்கு செல்லும் வழியில்தான் ரயில்வே கேட் உள்ளது. இங்கு கீழ்பாலம் அமைந்தால் பக்தர்கள் வாகனங்களில் செல்ல முடி யாத நிலை உருவாகிவிடும். எனவே, பேராவூரணி டவுன் ஆத்தாளூரில் ரயில்வே கீழ்பாலம் அமைக்கும் பணியை கைவிடவும், தொடர்ந்து ரயில்வே கேட் (LC117CE2) பயன்பாட்டில் இருக்கும்படி யும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள் கிறோம்” என கூறப்பட்டுள்ளது.