கும்பகோணம், மார்ச் 4 - தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 15 உறுப்பினர்களில் பேரூ ராட்சித் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் அறிவிக்கப் பட்டது. இதனைத் தொடர்ந்து ஆடுதுறை பேரூராட்சியில் தேர்வு செய்யப்பட்ட திமுக கூட்டணியை சேர்ந்த 3 உறுப்பினர்கள் தலைவர் தேர்தலில் வாக்கு செலுத்த வராததால் பதற்ற சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது திமுக மூன்று உறுப்பினர்களை பாமகவினர் கடத்தி வைத் துள்ளதாக புகார் தெரிவித்து அவர்களை மீட்டுத் தரும்படி யும், முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும் எனக் கோரி யும் வெற்றி பெற்ற உறுப்பி னர்கள் பேரூராட்சி அலுவல கத்தில் தர்ணாவில் ஈடுபட்ட னர். இதனை தொடர்ந்து திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி யினர் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட னர். அப்போது போலீசார் குவிக்கப்பட்ட நிலையில், சிறு தடியடி நடத்தி கூட்ட த்தை கலைத்தனர். இதனைத் தொடர்ந்து மதியம் 2 மணி வரை திமுக உறுப்பினர் மூன்று பேர் வராததால் தலை வர், துணைத்தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்ட தாக தேர்தல் அதிகாரி இள வரசன் அறிவித்தார். இருந்தும் பாட்டாளி மக்கள் கட்சி, அதிமுகவினர் உடனே தேர்தலை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து அவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.